மதமும் கடவுளும் அரசியல்வாதிகளிடம் சிக்குவது ஆபத்து.. யாரை விமர்சிக்கிறார் நடிகர் கிஷோர்?
சென்னை: மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவது மிகவும் ஆபத்தான போக்கு என நடிகர் கிஷோர் விமர்சித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் அயோத்தி பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதையடுத்து சூட்டோடு சூடாக உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டது.

இதற்கு கடந்த 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. இந்த விழாவில் ஏராளமான விஐபிகள் கலந்து கொண்டிருந்தனர். இதையடுத்து பால ராமரை பார்க்க கடந்த 23 ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த இரு தினங்களில் பால ராமரை 5 லட்சம் பேர் தரிசித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ராமர் கோயில் விழாவில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். ராமர் கோவில் திறப்புக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதாவது இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, அங்கு மசூதியை இடித்துவிட்டு கோயிலை கட்டுவது சரியா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் ராமர் கோயில் திறப்பை விமர்சித்து நடிகர் கிஷோர் சமூக வலைதள பக்கத்தில் பதிவை பகிர்ந்துள்ளார். அதில் கோவில், மன்னர்கள், மற்றும் அரசியலை வைத்து அடக்குவது என்பது நாம் இதுவரை பார்த்திராத ஒன்று அல்ல. இன்று நாம் மன்னர்களின் காலத்திற்கே சென்றுவிட்டது போல் தெரிகிறது.
கடவுளின் பெயரில் சாமியார்களுடன் கைகோர்த்து மக்களை அடக்கி வருகிறார்கள். கோயிலை கட்டி அதில் தங்களின் பெயர்களை செதுக்கி வைத்து கொள்வது கோவிலை கட்டிய நபர்களின் கையை வெட்டுவது, தங்களின் பெருமையை பேசி பேனர் வைத்துக் கொள்வது தொடர்ந்து நடக்கிறது.
மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும் அவர்களை கேள்வி கேட்க முடியாத இடத்திற்கு எடுத்துச் செல்வதும் மிகவும் ஆபத்தானது. நாட்டின் கலாச்சாரத்திற்கும் எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என பதிவிட்டுள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications