எங்களை இந்தி பேச சொல்ல நீங்கள் யார்? உங்கள் அஜெண்டா என்ன?.. அமித்ஷாவுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி
சென்னை: என்ன மொழி பேச வேண்டும் என சொல்ல நீங்கள் யார் என மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37 ஆவது கூட்டம் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அவர் கூறுகையில் ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல.. சர்வதேச மொழியான ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.

70 சதவீத நிகழ்ச்சி நிரல்
வெவ்வேறு மொழிகளை பேசும் மாநிலங்களிலுள்ள மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் போது அது இந்திய மொழியில் இருக்க வேண்டும். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

தென்னிந்தியாவில் கண்டனம்
இதற்கு தென்னிந்தியாவில் கண்டனங்கள் வலுத்துள்ளன. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை மக்கள் மறக்கடிப்பதற்காக இது போல் ஹிந்தி மொழி பிரச்சினையை மீண்டும் மத்திய அரசு கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான்
அது போல் அமித்ஷா இந்தியை இணைப்பு மொழியாக கற்க வேண்டும் என தெரிவித்த கருத்து குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில் தமிழ்தான் இணைப்பு மொழி என ஒரே வரியில் பளீச்சென பதில் அளித்தார். அது போல் எத்தனை மாநிலங்களில் எத்தனை சதவீதத்தில் தமிழ் பேசப்படுகிறது என்பது குறித்து வரைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் காட்டமான பதிலை சொல்லியுள்ளார்.

பிரகாஷ் ராஜ்
அவர் கூறுகையில் எங்கள் மீது இந்தியை திணிக்காதீர்கள், பன்முகத்தன்மையை நாங்கள் நேசிக்கிறோம். எங்கள் தாய்மொழியை நேசிக்கிறோம். நாங்கள் என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்? உங்கள் அஜென்டா என்ன? என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரகாஷ் ராஜ் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications