'சங்கி' கெட்ட வார்த்தை கிடையாது.. சட்டென முகம் மாறிய ரஜினிகாந்த்! சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி
சென்னை: தனது தந்தையை சங்கி என்று குறிப்பிடுவது வேதனை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'சங்கி' என்பது கெட்ட வார்த்தை இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் 'லால் சலாம்'. இந்த பெயர் இடதுசாரிகளின் முழக்கமாகும். இதற்கு 'செவ்வணக்கம்' என்று பொருள். கம்யூனிஸ, சோசலிச புரட்சிகர தத்துவங்களை பின்பற்றி அதற்காகவே உயிர்நீத்தவர்களுக்கு செவ்வணக்கம் முழங்கப்படும். இந்த பெயரில் தயாராகியுள்ள திரைப்படத்தில், நடிகர் ரஜினி இஸ்லாமியர் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

சமீப காலங்களாக ரஜினியின் நடவடிக்கைகள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து பங்கேற்றது என அவர் இந்துத்துவ நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு அவ்வப்போது விளக்கமளித்து தன் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து வந்திருக்கிறார் ரஜினி.
இப்படி இருக்கையில் 'லால் சலாம்' எனும் திரைப்படத்தில் அவர் நடத்திருப்பது பெரும் கவனத்திற்கு உள்ளானது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பேசியிருந்தது சலசலப்புகளை ஏற்படுததியிருந்தது. அதாவது,
"எங்கள் படக்குழுவினர், சோசியல் மீடியாவில் வரும் பதிவுகளை அவ்வப்போது காட்டினார்கள், அதில் என் காதில், அடிக்கடி ஒரு வார்த்தை விழுகுது. எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. ஒரு அரசியலை சார்ந்தவங்களை சங்கின்னு சொல்லுவாங்கன்னு சொன்னாங்க. சங்கி வார்த்தை முதலில் எனக்கு தெரியாது. அதை பற்றி தெரிந்து வேதனைப்பட்டேன். ஒரு இயக்குனராக இதை சொல்ல பெருமைப்படுகிறேன். ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. அந்த தைரியம் ரஜினியை தவிர யாருக்கும் இல்லை" என்று பேசியிருந்தார்.
இது குறித்து சோஷியல் மீடியாக்களில் பெரும் விவாதம் வெடித்தது. இந்நிலையில், வழக்கம்போல இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி விளக்கமளித்திருக்கிறார். அதில், "சங்கி என்பது கெட்டவார்த்தை என்று பொருள்பட ஐஸ்வர்யா பேசவில்லை. ஆன்மீகவாதியான தனது தந்தையை சங்கி என குறிப்பிடக்கூடாது என ஐஸ்வர்யா பேசினார்" என்று தனது பாணியில் விளக்கமளித்துள்ளார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications