தமிழன்டா! இது தமிழர்களின் பாரம்பரிய அடையாளம்! செங்கோல் பற்றி நடிகர் ரஜினி பெருமை! மோடிக்கு நன்றி
சென்னை: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதில் மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோல் நிறுவப்பட உள்ள நிலையில் அதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் ‛தமிழன்டா' என பெருமையாக கூறியுள்ளதோடு, பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டத்துக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பரில் நாட்டினார். அதன்பிறகு 2021ல் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் முக்கோண வடிவில் பிரமாண்டமாக இந்த நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா அதன் வளாகத்தில் நாளை நண்பகல் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது. புதிய நாடாளுமன்றத்தை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க இருக்கிறார். விழாவில் பங்கேற்க மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும் எனக்கூறி காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளன. மேலும் தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த புதிய நாடாளுமன்றம் நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்றும் நோக்கில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பொருட்கள் வாங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் நாடு சுதந்திரம் அடைந்தபோது அதை அடையாளப்படுத்தும் விதமாக ஆங்கிலேயர்கள், அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கிய செங்கோல் மக்களவை சபாநாயகரின் இருக்கை அருகே நிறுவப்பட உள்ளது.

இந்த செங்கோல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும். அதாவது ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சியை எப்படி நாம் ஏற்பது என நேரு, ராஜாஜியை கலந்து ஆலோசித்தார். இந்த வேளையில் ராஜாஜி செங்கோல் பரிமாறி ஆட்சியை ஏற்கலாம் என்றார். இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் மூலம் சென்னையைச் சேர்ந்த வும்மிடி பங்காரு செட்டி நகைக்கடையில் வும்மிடி எத்திராஜுலு மற்றும் வும்மிடி சுதாகர் ஆகியோர் செங்கோலை உருவாக்கினார். இந்த செங்கோலை மவுண்ட் பேட்டன் பிரபு, நேருவிடம் வழங்கினார். இந்த செங்கோல் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் பிரக்யாராஜ் மியூசியத்தில் இருந்த நிலையில் தான் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது.
இந்த செங்கோல் மியூசியத்தில் இருந்து எடுத்து டெல்லி கொண்டு செல்லப்பட்டது. இந்த செங்கோலை இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் வழங்கினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து 21 ஆதீனங்களும் பங்கேற்றுள்ளனர். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , மத்திய இணைமந்திரி எல்.முருகன் உடனிருந்தனர்.
இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் செங்கோல் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக கூறியுள்ளதோடு, பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது: ‛‛இந்திய நாட்டின் புதிய பாராளுமன்ற கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல். தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பாரதப்பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த நன்றி'' என கூறியுள்ளார். மேலும் இந்த ட்விட்டர் பதிவை நடிகர் ரஜினிகாந்த் ‛தமிழன்டா' என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications