“நேசித்தவர்களை இழந்த குடும்பங்களுக்கு தைரியம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்”.. நடிகர் ரவி மோகன் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் நடை​பெற்ற தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்த சம்​பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக நடிகர் ரவி மோகன் இரங்கல் தெரிவித்துள்ளார். "இந்த துயரமான நேரத்தை எதிர்கொள்ள மன உறுதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்" என ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

கரூரில் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி 17 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 40 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்த சம்​பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actor Ravi Mohan Offers Condolences Over Karur Stampede Tragedy

கரூர் வேலு​ச்சாமிபுரத்​தில் தவெக தலை​வர் விஜய் சனிக்கிழமை இரவு பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். முன்​ன​தாக, காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்​சா​ரம் செய்ய காவல் துறை தரப்​பில் அனு​மதி அளிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், நாமக்​கல்​லில் பிரச்​சா​ரம் முடித்து​விட்டு பிற்​பகல் 3 மணிக்​குப் பிறகு​தான் விஜய் அங்கிருந்து கிளம்​பி​னார்.

இதற்​கிடையே, கரூர் வேலுச்​சாமிபுரத்​தில் பகல் 12 மணி முதலே தொண்டர்​கள், ரசிகர்​கள் திரள ஆரம்​பித்​தனர். கரூர் மாவட்ட எல்​லை​யான வேலா​யுதம்​பாளை​யத்​தில் இருந்தே கூட்​டம் அதி​க​மாக இருந்​த​தால் பிரச்சா​ரப் பேருந்து மிக​வும் மெது​வாக நகர்ந்​தது. இதனால் இரவு 7.15 மணிக்​கு​தான் பிரச்​சார இடத்துக்கு விஜய் வர முடிந்தது.

அங்கு விஜய் பேச ஆரம்​பித்​த​போது, அவரது மைக் வேலை செய்​ய​வில்​லை. அவரது பேச்​சைக் கேட்​ப​தற்​காக பின்​னால் இருப்​பவர்​கள் நெருங்​கியடித்​தபடி பிரச்​சா​ரப் பேருந்தை நோக்கி வந்​தனர். இதனால் முன்​னால் காத்திருந்​தவர்​கள் கடுமையான கூட்ட நெரிசலில் சிக்​கினர்.

விஜய் பேசிக் கொண்​டிருந்​த​போதே மூச்​சுத் திணறி பலர் அடுத்​தடுத்து மயங்கி விழத் தொடங்​கினர். மேலும், அப்​பகு​தி​யில் இருந்த மரக்​கிளை உடைந்து விழுந்​த​தி​லும் சிலர் காயமடைந்​தனர். விஜய் பிரச்​சாரத்தை முடித்து கிளம்​பிய பின்​னரே அவர்​களை மீட்க முடிந்​தது.

அங்​கிருந்து ஆம்​புலன்ஸ் மூலம் மீட்​கப்​பட்ட பெண்​கள், குழந்​தைகள் உள்​ளிட்​டோர் கரூர் காந்தி கிராமத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனும​திக்​கப்​பட்​டனர். இவர்​களில் குழந்​தைகள், பெண்​கள் உட்பட 40 பேர் பரிதாபமாக உயி​ரிழந்​தனர்.

கரூர் சம்​பவம் குறித்து தகவலறிந்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், உடனடி​யாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜியை தொடர்​பு​கொண்​டு, பாதிக்கப்பட்டோரை மீட்​க​வும், அவர்​களுக்கு உரிய மருத்​துவ சிகிச்சை அளிக்​க​வும் உத்​தர​விட்​டார். இதையடுத்​து, 50-க்​கும் அதி​க​மான ஆம்புலன்​ஸ்​கள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்​கப்​பட்​ட​வர்​களை மீட்டனர்.

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டுள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகமும் அறிக்கை கேட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூரில் நடந்த துயரச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரவி மோகன், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரவி மோகன் வெளியிட்டுள்ள பதிவில், "கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த துயரமான நேரத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு மன உறுதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். ஆன்மா சாந்தியடையட்டும்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+