செல்பி எடுக்க முயன்ற ரசிகர்.. செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார்
Recommended Video

மதுரை : செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டனர்.

அப்போது திறப்பு விழா இடத்துக்கு வந்த சிவக்குமாரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களில் ஒருவர் உள்ளே வந்து சிவக்குமார் வந்து கொண்டிருக்கும் போது செல்பி எடுக்க முயன்றார்.
செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்ட நடிகர் சிவகுமார் #Sivakumar #Viral #Selfie #ViralVideo pic.twitter.com/zYiM0JhKpA
— Oneindia Tamil (@thatsTamil) October 29, 2018
உடனே யாரும் எதிர்பாராத வேளையில் சிவக்குமார் அவரது போனை தட்டி விட்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த ரசிகர் யாரிடமோ இதுகுறித்து முறையிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
[ஒரு செல்ஃபி, ஓங்கி ஒரே அடி.. உலக பேஃமசான சிவகுமார்.. கலகல மீம்ஸ்கள்]












Click it and Unblock the Notifications