"மொதல்ல அந்த 2 பேரையும் என் வீட்டிலிருந்து வெளியேற்றுங்க".. போலீஸுக்கு போன விஜய்.. புது பரபரப்பு
நடிகர் விஜய் போலீசில் புகார் தந்துள்ளார்
சென்னை: "என் வீட்டில் 2 பேர் இருக்காங்க.. அவங்களை உடனே வெளியேற்ற வேண்டும்" என்று நடிகர் விஜய் போலீசில் புகார் தந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அவரது அப்பா பதிவு செய்தார்.. ஆனால் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று விஜய் சொல்லிவிட்டார்.. மேலும், தன்னுடைய ரசிகர்கள் யாரும் அக்கட்சியில் சேர வேண்டாம் என்றும் சொல்லி ஒரு அறிக்கையும் வெளியிட்டார்.

மேலும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா, துணை செயலாளர் ஏ.சி.குமார் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இயக்க பொறுப்பாளர் ஆனந்த் கடந்த நவம்பர் மாதத்தில் நீக்கம் செய்து அறிவித்தார். அவர்கள் இருவரும் எஸ்ஏசியின் ஆதரவாளர்கள் ஆவர். எஸ்ஏசி எங்கே கூட்டம் போட்டாலும் இவர்கள் 2 பேரும் அங்கு சென்று விடுவார்களாம்.
இதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் எஸ்ஏசி ஆதரவாளர்களை களையெடுக்கும் பணி தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.. ரவிராஜா, ஏ.சி.குமார் இருவரும் விஜய்யின் சாலிகிராம் வீட்டில் தங்கி உள்ளனர்.. ஆனால், இவர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால், வீட்டை காலி செய்யும் படி நடிகர் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆனால் அவர்கள் 2 பேருமே வீட்டை காலி செய்யவில்லை போல் தெரிகிறது.. அதற்காகத்தான் விஜய், விருகம்பாக்கம் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார்.. விஜய் தரப்பில் அவரது வக்கீல்கள் இந்த மனுவை தந்துள்ளார்.. மாஸ்டர் படம் வெளியாகுமோ என்னவோ என்ற கவலை ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வீட்டு பிரச்சனை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications