கையெடுத்து கும்பிட்டு கேட்குறேன்..இனி அப்படி செய்யாதீங்க!அணில் போல் சேட்டை.. வேதனையோடு விஜய் போஸ்ட்!
சென்னை: கோவையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதால் உற்சாகத்தில் இருக்கிறது விஜய் தரப்பு. அதே நேரத்தில் தொண்டர்கள் சிலர் விஜயின் வாகனத்தின் மீது ஏறியது, இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று விபத்தில் சிக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் இனிமேல் அவ்வாறு செய்யக்கூடாது என கண்டிப்போடு கட்டளையிட்டு இருக்கிறார் விஜய்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்றதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் கலந்து கொண்டார்.
முன்னதாக விஜய் விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு செல்லும் வழியிலும், ஹோட்டலில் இருந்து நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு செல்லும் வரை ஆயிரக்கணக்கானோர் சாலையில் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது சிலர் மரத்திலிருந்து விஜயின் வாகனத்தின் மீது தாவினர், சிலர் விஜயின் பாதுகாப்பை மீறி வாகனத்தின் மீது ஏறி விஜய்க்கு கை கொடுக்க முயன்றது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை பெற்று தந்தது. மேலும் சிலர் தலைக்கவசம் அணியாமல் பலர் விஜயின் வாகனத்தை துரத்தி சென்று விபத்திலும் சிக்கினர். இதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தது. இந்த நிலையில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என கண்டிப்பாக கட்டளையிடுவதாக விஜய் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you Kovai and Kongu Thangams. நம் மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன.
அதனால் இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன். நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரிபண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும்...அதுதான் நீங்க.
இப்டில்லாம் செய்ற நீங்க, அன்பின் காரணமா செய்ற சிலதையும் சொல்லி ஆகணும். உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ். அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன். ஆனா எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும்.
எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கதான் எனக்கு precious.
இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல. உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.
உங்க அன்ப நான் மதிக்கறேன்... இனி எப்பவும் மதிப்பேன்... அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது.
நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க...தப்பே இல்ல. நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம்
100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ். அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும். இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால
நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன். செய்வீங்க... செய்றீங்க...
ஓகே?." என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications