பெண்களை சைட் அடிக்க.. விடுமுறைக்காக மாணவர்கள் போராடுறாங்க.. ஒய்.ஜி.மகேந்திரன் ஷாக் பேச்சு
சென்னை: பெண்களை சைட் அடிக்கவும், விடுமுறைக்காவும் பெரும்பான்மையான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வருகிறது. மாணவர்கள் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து நடிகர் ஒய்ஜி மகேந்திரன் பேசியது ச்ர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் போராட்டம்
சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் நடைபெற்ற விழாவில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கலந்துகொண்டு பேசுகையில் தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று நடத்திக் கொண்டிருப்பதாக விமர்சத்தார்.

பல்பொடி சரியில்லை
பல்பொடி சரி இல்லை என்றால் கூட போராட்டம் நடத்துவதாகவும் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் போராட்டங்களை நடத்தியே வள்ளுவரை சாகடிக்கின்றனர் என்றும் விமர்சித்தார்.

25 சதவீத மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களில் 25% பேர் போராட்டம் குறித்த அறிவுடன் போராடுகிறார்கள் என்றும் நடிகர் ஒய்ஜி மகேந்திரன் பள்ளி விழாவில் பேசினார்

சைட் அடிக்க
மீதமுள்ள 75% பேர் விடுமுறை கிடைக்கும் என்றும், கலாட்டா செய்யவும் தான் போராடுகிறார்கள் என்றும் பெண்களை சைட் அடிப்பதற்காகவும் போராட்டத்திற்கு செல்கின்றார்கள் என்றும் ஒய்ஜி மகேந்திரன் விமர்சித்தார்.

போராட்டம் வேண்டாம்
படிக்கும் மாணவர்களுக்கு போராட்டம் தேவை இல்லாதது என்று கூறிய ஒய்ஜி மகேந்திரன், மாணரகள் படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வன்முறை வேண்டாம்
ஏதாவது குறைகள் இருந்தால் அதை நியாயமான முறையில் கேட்க வேண்டும் என்று கூறிய அவர், கல் எறிவது, பேருந்துகளை எரிப்பது, கலவரம் செய்வது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது என இருக்கக் கூடாது என்றும் ஒய்ஜி மகேந்திரன் வலியுறுத்தினார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications