தமிழ்நாடு எல்லாம் கொடுக்கும்.. உணர்ச்சிவசப்பட்ட தேவயானி.. மேடையில் கலங்கிய பெண்கள்
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை திட்டம் இரண்டாம் கட்ட விரிவாக்க நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் சாதனை படைத்த பல பெண்கள், திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை தேவயானி பேசியதுதான் பயங்கர ஹைலைட். நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும், எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது தமிழ்நாடு தான். தமிழ்நாடு வாழ வைக்கும் பூமி என்று உணர்வுபூர்வமாக பேசினார். அவரின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது".
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கடுமையான முயற்சிகளை செய்து வருகிறது. அரசு ரீதியாக பல திட்டங்களை அறிவிப்பதோடு, அரசியல் ரீதியாக பல்வேறு வியூகங்களை திமுக அமைத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2வது கட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தேவயானி பேச்சு
இதில் நடிகை தேவயானி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "இந்த மேடையில் நிற்பதே தனி மரியாதை., இதை பெருமையான தருணமாக கருதுகிறேன். இந்த வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த தமிழ்நாடு அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேடையில் நிற்கும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கை கதையும் உத்வேகமளிக்கும் வகையில் உள்ளது. உங்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கை, செயல்பாட்டிற்கு ஹாட்ஸ் ஆஃப்.
பெண்களின் தன்னம்பிக்கை
நம் பூமி மிகவும்ட அழகானது. மிகவும் பாதுகாப்பான பூமி. பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பூமியாக உள்ளது. ஒரு பெண்ணாக பிறக்கும்போதே நாம் வெற்றி பெற்றுவிட்டோம். நாம் எல்லோருமே சாதனை படைப்பவர்கள் தான். ஒவ்வொருவரிடமும் அவ்வளவு எனர்ஜி உள்ளது. நமக்கள் அவ்வளவு நம்பிக்கை பொதிந்துள்ளது. தமிழ்நாடு அரசு பெண்களுக்காக எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். இப்போதும் கொண்டு வருகிறார்கள். இனியும் நிறைய கொண்டு வருவார்கள்.
எல்லாம் கொடுத்தது தமிழ்நாடு
அதற்கு அனைத்து பெண்கள் சார்பில் சிரம் தாழ்ந்த நன்றியை கூறிக் கொள்கிறேன். தமிழ்நாடு வாழவைக்கும் பூமி. இங்கு யார் வந்தாலும் அழகாக, அன்பாக குடும்பத்தினரை போல பார்த்துக் கொள்ளாவர்கள். அவர்களுக்கு வேரலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் என எல்லாவற்றையும் கொடுக்கும். நான் பிறந்து வளர்ந்தது மும்பையாக இருந்தாலும் எனக்கு எல்லாமே கிடைத்தது தமிழ்நாட்டில் தான். அதற்கு நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும். நான் இங்கு வந்தபோது எனக்கு அழகான வாய்ப்புகள் கொடுத்து பெயர்,. புகழ் கொடுத்தது தமிழ்நாடு தான்.
தமிழ் பூமி
இன்றைக்கு நான் என்னவாக இருக்கிறேனோ அது எல்லாமே இந்த தமிழ் பூமி கொடுத்தது. இங்கு எல்லாரும் ஒன்று தான். கஷ்டம் வரும். அதுவே நிரந்தரம் இல்லை. எனவே பயப்பட வேண்டாம். எதுவும் கடந்து போகும். மகிழ்ச்சியாக இருப்போம். பாசிட்டிவாக இருப்போம். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார். அப் பாது மேடையில் நின்ற பெண்களின் கைகளை குலுக்கி தன் அன்பை வெளிப்படுத்தினார். தேவயானி பேசும் போது அரங்கத்தில் கைத்தட்டல், விசில் அதிர வைத்தது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications