த்ரிஷா, விசித்ராவை தொடர்ந்து! அமைதிப்படை அல்வா சீனில் சத்யராஜ் அத்துமீறினாரா? நடிகை கஸ்தூரி பதில்
சென்னை: அமைதிப்படை படத்தில் அத்துமீறல் நடந்ததா, நடிகர் சத்யராஜ் குறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியிருந்ததாக அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து மன்சூருக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். த்ரிஷாவும் மன்னிப்பது தெய்வீக குணம் என கூறி மன்னித்துள்ளார். த்ரிஷாவின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் பாடகி சின்மயியோ நயன்தாரா குறித்து ராதாரவி பேசியதை கேள்வி எழுப்பினார்.
அது போல் ஒரு முறை ஐஸ்வர்யா ராயை ரேப் செய்திருப்பேன் என்றும் அவர் கூறிய போது யாருமே தட்டிக் கேட்கவில்லை, நடவடிக்கை பாயவில்லையே ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். அது போல் நடிகை விசித்ராவோ தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக பேசியதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
அது போல் இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நடிகை ஒருவர் பரபரப்பை கிளப்பினார். ஆனால் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்த போது பாலியல் தொல்லை தனக்கு நடந்ததில்லை என்றும் அவர் போல் சிறந்த மனிதர் இருக்க முடியாது, மிகவும் அன்பானவர் ரஜினிகாந்த் என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி அமைதிப்படை படத்தில் நடித்த சத்யராஜுடன் இணைந்து அல்வா கொடுக்கும் சீனில் நடித்தது குறித்து உங்கள் கருத்து என்ன? அல்வா சீனில் அவர் மோசமாக நடித்தது குறித்து நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதற்கு கஸ்தூரி பதிலளிக்கையில் சத்யராஜ் சார் மிகவும் நல்லவர்.

அந்த அல்வா சீனில் நான் நடித்தது என் நினைவில் இருக்கிறது. அந்த சீனில் எனக்கு அசவுகரியம் இருந்ததை தெரிந்து கொண்ட சத்யராஜ் மிகவும் ஜாக்கிரதையாக நடித்தார். அந்த சீன் மட்டுமே 4 மணி நேரம் எடுத்தார்கள். இதை வெறும் நடிப்பாகவே நினைத்து நாங்கள் நடித்தோம். அந்த சீனை என் தாயும் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
மணிவண்ணன் சாரும் சத்யராஜ் சாரும் எப்படியெல்லாம் டயலாக்கை பேசுகிறார்கள் என என் தாய் என்னிடம் ஆச்சரியத்துடன் கூறினார். அந்த சீன் எடுக்கப்பட்ட தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ளுங்கள். அங்கு சத்யராஜ் சாரால் மோசமான நடத்தை ஏதும் நடக்கவில்லை. அமைதிப்படை ஷூட்டிங் அனுபவம் மறக்க முடியாதது. சத்யராஜின் நடிப்பை அவர் கூடவே இருந்து பார்த்தேன். என்னிடம் காமெடியாக பேசுவார். அல்வா சீன் உள்பட அந்த படத்தில் நடித்த ஒவ்வொரு சீனையும் நினைத்து பெருமைப்படுகிறேன் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications