த்ரிஷா, விசித்ராவை தொடர்ந்து! அமைதிப்படை அல்வா சீனில் சத்யராஜ் அத்துமீறினாரா? நடிகை கஸ்தூரி பதில்
சென்னை: அமைதிப்படை படத்தில் அத்துமீறல் நடந்ததா, நடிகர் சத்யராஜ் குறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியிருந்ததாக அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து மன்சூருக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். த்ரிஷாவும் மன்னிப்பது தெய்வீக குணம் என கூறி மன்னித்துள்ளார். த்ரிஷாவின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் பாடகி சின்மயியோ நயன்தாரா குறித்து ராதாரவி பேசியதை கேள்வி எழுப்பினார்.
அது போல் ஒரு முறை ஐஸ்வர்யா ராயை ரேப் செய்திருப்பேன் என்றும் அவர் கூறிய போது யாருமே தட்டிக் கேட்கவில்லை, நடவடிக்கை பாயவில்லையே ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். அது போல் நடிகை விசித்ராவோ தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக பேசியதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
அது போல் இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நடிகை ஒருவர் பரபரப்பை கிளப்பினார். ஆனால் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்த போது பாலியல் தொல்லை தனக்கு நடந்ததில்லை என்றும் அவர் போல் சிறந்த மனிதர் இருக்க முடியாது, மிகவும் அன்பானவர் ரஜினிகாந்த் என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி அமைதிப்படை படத்தில் நடித்த சத்யராஜுடன் இணைந்து அல்வா கொடுக்கும் சீனில் நடித்தது குறித்து உங்கள் கருத்து என்ன? அல்வா சீனில் அவர் மோசமாக நடித்தது குறித்து நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதற்கு கஸ்தூரி பதிலளிக்கையில் சத்யராஜ் சார் மிகவும் நல்லவர்.

அந்த அல்வா சீனில் நான் நடித்தது என் நினைவில் இருக்கிறது. அந்த சீனில் எனக்கு அசவுகரியம் இருந்ததை தெரிந்து கொண்ட சத்யராஜ் மிகவும் ஜாக்கிரதையாக நடித்தார். அந்த சீன் மட்டுமே 4 மணி நேரம் எடுத்தார்கள். இதை வெறும் நடிப்பாகவே நினைத்து நாங்கள் நடித்தோம். அந்த சீனை என் தாயும் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
மணிவண்ணன் சாரும் சத்யராஜ் சாரும் எப்படியெல்லாம் டயலாக்கை பேசுகிறார்கள் என என் தாய் என்னிடம் ஆச்சரியத்துடன் கூறினார். அந்த சீன் எடுக்கப்பட்ட தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ளுங்கள். அங்கு சத்யராஜ் சாரால் மோசமான நடத்தை ஏதும் நடக்கவில்லை. அமைதிப்படை ஷூட்டிங் அனுபவம் மறக்க முடியாதது. சத்யராஜின் நடிப்பை அவர் கூடவே இருந்து பார்த்தேன். என்னிடம் காமெடியாக பேசுவார். அல்வா சீன் உள்பட அந்த படத்தில் நடித்த ஒவ்வொரு சீனையும் நினைத்து பெருமைப்படுகிறேன் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications