வியாக்கியானம் பேசிய ரஞ்சனா நாச்சியார்! வெளியே வச்சுகங்க மேடம்! விரட்டியடித்த மாங்காடு போலீஸ்!
சென்னை: நீதிமன்ற உத்தரவுப் படி சென்னை மாங்காடு காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார், அங்கு செய்தியாளர் ஒருவரிடம் வியாக்கியானம் பேசியதை பார்த்த போலீஸார் வெளியே வச்சுகங்க மேடம் எனக் கூறி காவல் நிலைய வளாகத்திலிருந்து விரட்டியடித்தனர்.
நடத்துனர், ஓட்டுநரின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் அவர்களை நாயே நாயே என கத்தி திட்டிவிட்டு கடைசியில் வியாக்கியானம் பேசிக்கொண்டிருக்கிறார் நடிகை ரஞ்சனா நாச்சியார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவும், மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவும் அண்ணாமலை மிகக் கடுமையாக உழைத்து ஒரு பக்கம் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், அதனை திசை திருப்பும் விதமாக ரஞ்சனா நாச்சியாரின் நடவடிக்கைகள் அமைந்துவிட்டதாக கருதுகிறது அண்ணாமலை தரப்பு.

தனது சொந்தமாவட்டமான கரூரில் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி வரும் நிலையில் அந்தச் செய்தியை இருட்டடிப்பு செய்திருக்கிறது பாஜகவை சேர்ந்த ரஞ்சனா நாச்சியாரின் செய்திகள். இதனிடையே ஜாமினில் உள்ள ரஞ்சனா நாச்சியார், இன்று மாங்காடு காவல் நிலையத்தில் நீதிமன்ற நிபந்தனை படி கையெழுத்திட வந்த போது பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தாம் ஒன்றும் திட்டமிட்டு மாணவர்களை தாக்கவில்லை என்றும் தாம் பயணித்த கார் முன்னால் சென்ற பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியதை பார்த்ததும் மனம் கேட்காமல் தட்டிக்கேட்டதாக தெரிவித்துள்ளார்.
தனக்கு பொதுமக்கள் மத்தியிலும், பாஜகவிலும் ஆதரவு பெருகியுள்ளதாக பெருமை பேசிய ரஞ்சனா நாச்சியார், ஆதங்கத்தில் பேருந்து நடத்துனரையும், ஓட்டுநரையும் திட்டியது தவறா என்றும் தன்னை பொறுத்தவரை நியாயமாகவே நடந்துகொண்டேன் எனவும் தெரிவித்தார். படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்தானது, அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. அதனால் படிக்கட்டில் பயணித்த மாணவர்களை கீழே இறங்கச் சொல்வதில் தவறில்லை. ஆனால் மாட்டை அடிப்பது போல் கண்மூடித்தனமாக பொதுவிடத்தில் அடுத்தவன் வீட்டு பிள்ளையை இழுத்துப் போட்டு தலை, கன்னம் என எதுவும் பார்க்காமல் ஓங்கி ஓங்கி அடித்ததும், ஒருமையில் பேசியதும் தான் ரஞ்சனா நாச்சியர் செய்த தவறு என பலரும் சுட்டிக்கட்டுகின்றனர்.
-
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications