ஹேமந்த்தால் பிரபல தொகுப்பாளினி கர்ப்பம்.. சித்ராவுக்கும் இது தெரியும்.. பகீர் கிளப்பும் ரேகா நாயர்
சென்னை: சின்னத்திரை சித்ரா மரணத்தில் மர்மங்கள் நிறைந்திருக்கிறது என்றால் அவரை சுற்றியுள்ள நபர்களின் வாழ்க்கையும் மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.
விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு பூந்தமல்லியில் ஒரு சொகுசு ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இவரது மரணம் தற்கொலை அல்ல, கொலை என சித்ராவின் பெற்றோரும் அவரது தோழி ரேகா நாயரும் கூறி வருகிறார்கள். ஆனால் பிரேத பரிசோதனையில் இது தற்கொலை என்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரேகா நாயர்
இந்த நிலையில் தனியார் ஊடகங்களுக்கு ரேகா நாயர் அவ்வப்போது பேட்டி அளித்து வருகிறார். அவர் கூறுகையில் ஹேமந்த் பல பெண்களுடன் உல்லாசமாக வாழ்க்கையை கழித்துள்ளார். பெண்களுடன் உல்லாசமாக இருப்பதைய வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் பழக்கம் ஹேம்நாத்திற்கு உள்ளது.

ஹேமந்த்
ஹேமந்தை பற்றி தெரியாமல் அவரது காதல் வகையில் பிரபல தொகுப்பாளினி ஒருவரும் விழுந்தார். இதன் காரணமாக இருவரும் அவ்வப்போது தனிமையில் பொழுதை கழித்தனர். அவருடன் நெருக்கமாக பழகியதால் அந்த தொகுப்பாளினி , கர்ப்பமானார். பின்னர் இந்த விஷயம் வீட்டுக்கு தெரியாமல் இருக்க படாதபாடு பட்டார்.

கர்ப்பமான தொகுப்பாளினி
இதையடுத்து ஹேமந்த்தை சந்தித்து விஷயத்தை கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சினார். ஆனால் அவர் மனம் இறங்கவே இல்லை. இதையடுத்து காலில் விழுந்து கெஞ்சினார், அப்போது முடியவே முடியாது என கூறினார். பின்னர் அந்த தொகுப்பாளினி தனது கர்ப்பத்தை கலைத்துவிட்டார்.

அதிர்ச்சி
இதில் இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால் ஹேமந்த் அந்த தொகுப்பாளினியுடன் பழகி கர்ப்பம் ஆனது முதல் காலில் விழுந்து கெஞ்சியது வரை எல்லாம் சித்ராவுக்கு தெரியும். ஆனால் அவர் இதை பற்றி கண்டுக்காமல் ஹேமந்துடன் பழகினார். சித்ரா மறைந்தபிறகு ஹேமந்த் 11 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கும் என்றார் ரேகா நாயர்.












Click it and Unblock the Notifications