யோசிக்காதீங்க.. நிக்க வச்சு சுடுங்க.. போட்ருங்க சார்.. நடிகை விஜயலட்சுமி ஆவேசம்!
Recommended Video

சென்னை: பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த கும்பல் செய்தியை கேட்டு உலகத் தமிழர்கள் நடுநடுங்கி போயுள்ளனர். இவர்களை என்னதான் செய்யலாம் என்று அவரவர் கருத்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் மனம் ஆறாமல் கோபத்தை வெளிப்படுத்தியும், ஆறுதலாக சில வார்த்தைகள் பேசியும் வருகின்றனர். இந்த நேரத்தில்தான் இயக்குநரும், நடிகருமான மனோ பாலா தமது டிவிட்டர் வளைத் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதே போல நேற்று நடிகர் சத்யராஜ் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். நடிகை விஜயலட்சுமி அகத்தியன் கோபத்துடன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
|
மனோ பாலா
இதுகுறித்து மனோபோல போட்டுள்ள டிவீட்டில், எல்லாம் இருக்கு... எல்லாம் மாடர்னாதான் இருக்கு. ஓகே அதை எந்த அளவுக்கு யூஸ் பண்ணணுமோ அந்த அளவுக்கு யூஸ் பண்ணுங்க. தயவு செய்து உங்களை கெஞ்சி கேட்கறேன், பெத்தவங்க எவ்ளோ மனசு வேதனை பாடுவாங்க பாருங்க.

பாலீஷ் பேச்சு
அனாவசியமா ஒரு பாலீஸான பேச்சை கேட்டு மயங்கி இப்படி சீரழிஞ்சு போறது உடன்படாத ஒன்று. இனி வேதனைப் படறதுல அர்த்தமில்லை. 200, 300 பொண்ணுங்களோட வாழ்க்கையை சீரழிச்ச அந்த படுபாவிகளை உண்மையிலே உயிரோடு விடறது தப்பு. தயவு செய்து சட்டம் அவங்களுக்கு தகுந்த தண்டனை குடுத்து அவங்களை தூக்குல ஏத்தணும்னு உருக உருக பேசி இருக்கார் மனோபாலா..
|
அகத்தியன்
நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள டிவீட்டில், யோசிக்க வேணாம், நிக்க வச்சு சுடுங்க, லைவ் டெலிகாஸ்டுல.. பயம் வரட்டும். பணபலம், அதிகாரம், வயசு, குரூர மனச்சுனு இந்த காம்பினேஷன்ல காலைத் தூக்கி காட்டற கருமாந்தரோலா பயத்துல பொத்திகிட்டு பொழப்ப பாக்கணும்.. உயிர் பயம் வந்தாதான் உருப்படுவான்ங்க போட்ருங்க சார் உடனே!!!. என்று ஆவேசமாக கூறியுள்ளார் விஜயலட்சுமி.

என் குத்தமா
பொள்ளாச்சி சம்பவத்துல உன் குத்தமா, என் குத்தமான்னு யாருமே அலசி ஆராயாம ஒரே நிலையில நியாயத்தின் பக்கம் இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு மக்கள் பேசறாங்க. இது உண்மைதான்... பசுத்தோல் போர்த்திய புலி மாதிரி காமுகர்கள் உலா வரும்போது, அடையாளம் காண்பது பெண்களால் மட்டும் எப்படி சாத்தியமாகும்.












Click it and Unblock the Notifications