Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 ரயில்களுமே.. தமிழ்நாட்டில் எந்த ஊருக்கெல்லாம் நல்ல செய்தி.. .. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்ளின் கோரிக்கையை ஏற்று பல்வேறு ரயில்களில் கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எழும்பூர்- தஞ்சாவூர் சோழன் விரைவு ரயில் உள்பட 10 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களுக்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரயில்வே கட்டமைப்புகள் பெரிய அளவில் பலப்படுத்தப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையை இணைக்கும் வகையில் கோவை வழித்தடமும், கன்னியாகுமரி வழித்தடமும் வலுவான கட்டமைப்பில் உள்ளது.இதில் கேரளாவை முதன்மையாக இணைக்கும் கோவை வழித்தடத்தில் இருவழிப்பாதை உள்ளது.

Additional stops have been announced on 10 trains in Tamil Nadu following public demand

அதேபோல் சென்னை முதல் மதுரை வரை இருவழிப்பாதை உள்ளது.இந்த வழித்தடங்களில் எத்தனை சிறப்பு ரயில்களை ரயில்வேயால் இயக்க முடியும். இதேபோல் தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமேஸ்வரத்தை இணைக்கும் வழித்தடமும், கோவையை தென்மாவட்டங்களுக்கு இணைக்கும் வழித்தடமும் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் இல்லாத மாவட்டமே தமிழ்நாட்டில் இல்லை என்கிற அளவிற்கு ரயில்வே கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னையை இணைக்கும் வகையில் எத்தனை ரயில்கள் விட்டாலும் லாபம் என்கிற நிலையே தெற்கு ரயில்வேக்கு உள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தெற்கு ரயில்வே, முக்கிய வழித்தடங்களில் ஓடும் விரைவு ரயில்கள் குறிப்பிட்ட ஊர்களில் நின்று செல்ல அனுதி அளித்து வருகிறது. அந்த வகையில் சோதனை அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தம் அளிக்கும். பின்னர் வரவேற்பு அடிப்படையில் நிரந்தரம் செய்தும் வருகிறது. அந்தவகையில், 10 ரயில்கள் குறிப்பிட்ட ஊர்களில் சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், "சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு தினமும் இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் (16865) கடலூர் துறைமுகத்தில் அதிகாலை 2.09 மணிக்கு நின்று செல்லும். மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் (16866) நள்ளிரவு 12.23 மணிக்கு நின்று செல்லும். இந்த நிறுத்தம் செப். 20-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தினசரி இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் (20691) சாத்தூர் நிலையத்தில் காலை 9.30 மணிக்கு நின்று செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு தினசரி இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் மாலை 6.16 மணிக்கு நின்றுசெல்லும்.

இந்த நிறுத்தம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதுதவிர, திருப்பதி-ராமேசுவரம் வாரம் மூன்று முறை விரைவு ரயில் (16779-16780) உள்பட மேலும் தமிழகத்தில் ஓடும் 8 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+