அதிமுக மா.செக்கள் கூட்டத்தை திடீரென தள்ளி வைத்த எடப்பாடி.. ஓபிஎஸ்- ரஜினி சந்திப்பால் பிளான் சேஞ்ச்?
சென்னை: வரும் செப்டம்பர் 4ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற இருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இன்று ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசியது, இந்த தேதி மாற்றத்திற்குக் காரணமாக இருக்குமோ என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.
அதிமுக தலைமைக் கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 4.9.2023 - திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக் கூட்டம், தேதி மாற்றப்பட்டு 10.9.2023 - ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

10.8.2023 அன்று நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக் குழுவினர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அதிமுகவின் 'பொன்விழா எழுச்சி மாநாடு' மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். எனினும், மாநாட்டில் வழங்கப்பட்ட சாப்பாடு கீழே கொட்டப்பட்டு வீணடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்த அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரம் தீவிரமடைந்துள்ளது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை, இந்தியா கூட்டணி தேர்தல் வியூகங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணி சார்பாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பாதையில் புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தை அடுத்த கலியனூர் பகுதியில் நாளை நடைபெற உள்ளது. இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்தச் சூழலில், நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்கே சென்று ஓபிஎஸ் இன்று சந்தித்துள்ளார்.
சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் நிலவரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நாளை காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்தச் சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!











Click it and Unblock the Notifications