"ராஜதந்திரி" ஸ்டாலின்.. கலர் மாறும் அதிமுக.. 2 "புள்ளிகள்" மட்டுமல்ல.. மெல்ல சாயும் "தலை"கள்!
அதிமுக நிர்வாகி ஸ்டாலினை பாராட்டி ஒரு போஸ்டர் ஒட்டி உள்ளார்
சென்னை: முதல்வர் முக ஸ்டாலினை பாராட்டி, ஒருவர் போஸ்டர் ஒட்டி உள்ளார்.. இது இந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்பட காரணம், போஸ்டர் ஒட்டியவர் அதிமுக பிரமுகராம்..!
Recommended Video
ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே ஸ்டாலினின் செயல்பாடுகள் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.. தொற்றை கட்டுப்படுத்துவது ஒருபக்கம், மக்களின் நலத்திட்டங்கள் மறுபக்கம், ஆட்சி அதிகாரங்களை சரியான திசையில் செயல்படுத்ததுவது இன்னொரு பக்கம் என நாலாபக்கமும் கவனத்தை முழுமையாக செலுத்த வேண்டி உள்ளது.
மிஸ்டர் கிளீன் என்பவர்களையே முக்கிய அதிகாரிகளாக ஸ்டாலின் நியமித்துள்ளதும், மூத்த மற்றும் புதிய முகங்களுடன் திமுக அமைச்சரவையை நியமித்துள்ளதும், மாற்று கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஒரே நாளில்.. 14 ஐஏஎஸ், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் மொத்தமாக திடீர் டிரான்ஸ்பர்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
அமைச்சர்கள்
அந்த வகையில், இந்த ஒரே வாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜியும் வாய்விட்டு, ஸ்டாலினின் செயல்பாடுகளை பாராட்டிவிட்டனர்.. இதுவே ஆச்சரியமான விஷயமாக பேசப்பட்டு வந்தது.. கடந்த காலங்களில் அதிக அளவு விமர்சித்தவர்களே, ஸ்டாலினை பாராட்டும் அதிசய நிகழ்வும் இந்த திமுக ஆட்சியில் நடந்து வருகிறது.
போஸ்டர்
அந்தவகையில் அதிமுக நிர்வாகி ஒருவர், ஸ்டாலினை பாராட்டி பகிரங்கமாக போஸ்டரே ஒட்டிவிட்டார்.. உளுந்தூர்பேட்டை தொகுதியில் திருநாவலூர் ஒன்றியம் உள்ளது.. இதில் ஏற்கனவே அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்தவர்தான் வண்டிப்பாளையம் ராஜா. இவர் தமிழக அளவில் அம்மா சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்துவருகிறார்.
ஜனநாயகம்
உளுந்தூர்பேட்டையில் திமுகவே தற்போது வெற்றி பெற்றுள்ளது.. மணிகண்ணன் என்பவர் எம்எல்ஏவாகி இருக்கிறார்.. இவரை ஆதரித்தும், முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் அவர்களை வாழ்த்தியும் போஸ்டர் ஒட்டியிருக்கிறார் ராஜா.. அந்த போஸ்டரில் "பணநாயகம் எப்போதும் வெல்லாது... பணத்தால் மக்களை விலைக்கு வாங்க முடியாது. ஜனநாயகம் வெல்லும் என்பதற்கு உதாரணம் மணிகண்ணன் வெற்றி" என்று தெரிவித்துள்ளார்.
பரபரப்பு
அப்படியென்றால், அதிமுக தரப்பு தேர்தலில் பணத்தை வாரி இறைத்தது என்று ராஜா மறைமுகமாகவே சொல்கிறார் போலும்.. ஆனால், அதிமுக பிரமுகர் ஒருவர், முதல்வரையும் திமுக எம்எல்ஏவையும் பாராட்டி போஸ்டர் ஒட்டியுள்ளதை பார்த்து உளுந்தூர்பேட்டை மட்டுமல்ல, அதிமுக தலைமையே வாயடைத்து போயுள்ளதாம்..!