அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் பதவியேற்றனர்.. பதவி பிரமாணம் செய்துவைத்தார் சபாநாயகர் தனபால்
Recommended Video
சென்னை: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் இன்று சட்டசபையில் முறைப்படி பதவியேற்றனர்.
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி தேர்தலும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து எஞ்சிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 23 ஆம் தேதி முடிவுகள் வெளியானது. அதிமுக இந்த இரண்டு தேர்தல்களிலும் பெரும் சரிவை சந்தித்தது.
இந்நிலையில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு சட்டசபையில் சபாநாயகர் தனபால் முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதிமுக 9 இடங்களை கைப்பற்றியதால் அதிமுக ஆட்சி நீடிக்கும் வாய்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.