நாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகம்.. அப்போ காக்கையை தேசிய பறவையாக்கலாமா?.. வைகைச்செல்வன்
சென்னை: நாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகமாக உள்ளன. அதற்காக காக்கைகளை தேசிய பறவையாக்க முடியுமா என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தி பேசும் மக்களை சந்தோஷப்படுவதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு ட்வீட்டை போட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவர் பதிவு செய்த ட்வீட்டில், இதையொட்டி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் இந்தியா பல மொழிளை கொண்ட ஒரு நாடு. இங்கு ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு.

இந்தி
ஆனால் இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த ஒரு மொழி வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. நாட்டை ஒரே மொழி ஒருமைப்படுத்த வேண்டும் என்றால் அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியாகும்.

ஒரே மொழி
ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என கருத்தை திணித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக தென்னிந்தியாவில் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மயில்கள்
இந்த நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை கூறியுள்ளார். அவர் கூறுகையில் இந்தியை நாட்டின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால் நாட்டில் மயில்களைவிட காக்கைகளின் எண்ணிக்கைதான் அதிகம்.

வைகைச்செல்வன்
அதற்காக காக்கைகளை தேசியப் பறவையாக்க முடியுமா என்று அண்ணா அன்றே கூறியிருந்தார் என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். இது போல் அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் எதிர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications