ஒரு கிலோ இட்லி மாவு வாங்கினால், ஒரு குடம் தண்ணி இலவசம் .. பலே சென்னை ஆஃபர்
சென்னை: ஒரு கிலோ இட்லி மாவு வாங்கினால், ஒரு குடம் தண்ணி இலவசம் என்று ஒருவர் அறிவித்துள்ளார்.
வாயை திறந்து சொல்ல முடியாத அளவுக்கு சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சத்துக்கு காரணம் திமுக, அதிமுக என இரு கட்சிகளுமே ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதில், திமுக உட்பட பிரதான கட்சிகள் பொதுமக்களுக்கு சொந்த முயற்சி எடுத்து குடிநீர் வழங்கி வருகிறார்கள். அதேபோல, மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்க, ஜோலார்பேட்டையிலிருந்து ரயில்களில் தண்ணீர் கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், ஒருவர் தண்ணீர் இலவசம் என்று விளம்பரம் செய்துள்ளார். சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் இட்லி மாவு கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடை ஓனர், "ஒரு கிலோ இட்லி அல்லது தோசை மாவு வாங்கினால் ஒரு குடம் நிலத்தடி நீர் இலவசம்" என்று விளம்பரம் தந்துள்ளார். அந்த விளம்பரத்துக்கு கீழே "மாவு வாங்க வரும்போது குடம் கொண்டு வரவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லை.. "குறிப்பு.. குடிநீரை வடிகட்டி காய்ச்சிய பிறகு உபயோகப்படுத்தவும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பஞ்சத்தை, தன்னுடைய மாவு கடை பிசினஸ்-க்கு ஓனர் நன்றாகவே பயன்படுத்தி உள்ளதால், இந்த விளம்பரம் வைரலாகி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications