தாலி கட்டியதும் விஜயகாந்த் மணக் கோலத்தில் போனது எங்கு தெரியுமா? அவரே எதிரா திரும்பினாரே! சோகம்!
சென்னை: விஜயகாந்த் திருமணம் நடந்த அதே நாளில் தான், அவரது நீண்டகால நண்பரான சுந்தர்ராஜனும் திருமணம் செய்து கொண்டார். பிரேமலதாவுக்கு தாலி கட்டிய கையோடு, சுந்தர்ராஜன் திருமணத்திற்குச் சென்று வாழ்த்தினார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தின் நீண்டகால நண்பராக இருந்தவர் மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன். விஜயகாந்த்தின் உதவியாளராகவும், விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் பொருளாளராகவும் அவர் இருந்தார். அவரது திருமணமும், விஜயகாந்த்தின் திருமணம் நடைபெற்ற அதே நாளில் தான் மதுரையில் நடந்தது.

விஜயகாந்த், 37 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாததால், 'விஜயகாந்த் திருமணம் செய்துகொள்ளும் நாளன்றுதான் நானும் திருமணம் செய்து கொள்வேன்' என்று அன்புப் பிடிவாதம் காட்டினார் சுந்தர்ராஜன். சபதம் எடுத்து அதன் படியே விஜயகாந்த்தின் திருமணம் நடந்த அன்றே தானும் திருமணம் செய்து கொண்டார்.
1990ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, மதுரையில் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, விஜயகாந்த்தின் திருமணத்தை நடத்தி வைத்தார். பிரேமலதாவிற்கு தாலி கட்டிய கையோடு, மணக்கோலத்தில், தனது நண்பர் சுந்தரராஜன் திருமணத்திற்குப் போய் அவரை வாழ்த்தினார் விஜயகாந்த். விஜயகாந்த் உடனே எப்போதும் இருந்த சுந்தர்ராஜன், அவரின் அன்பைப் பெற்றிருந்தார்.

தேமுதிக கட்சியை தொடங்கிய பிறகு, அதன் முதல் பொருளாளராக தனது நீண்டகால நண்பரான சுந்தர்ராஜனையே நியமித்தார் விஜயகாந்த். சுந்தர்ராஜனுக்கு 2011 சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் சீட் கொடுத்து, அவரை எம்.எல்.ஏ ஆக்கி சட்டசபைக்கு அழைத்துச் சென்றார் விஜயகாந்த்.

எனினும், அதன் பிறகு, விஜயகாந்த் - சுந்தர்ராஜன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும், தேமுதிகவைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் பலரும் அதிமுகவில் சேருவதற்கு முக்கிய காரணமாகவும், பாலமாகவும் இருந்தார் சுந்தர்ராஜன். மேலும், விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்தும் பேசினார்.

50 ஆண்டுகால நண்பரான சுந்தரராஜன், தனது நிழல் போல இருந்துவிட்டு தனக்கு எதிராகத் திரும்பியது விஜயகாந்த்துக்கு பெரும் கவலையை கொடுத்தது. கடந்த 2020ஆம் ஆண்டு சுந்தர்ராஜன், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணியின் கெத்து சிரிப்பு.. எரிச்சலான விசிக.. விருதாச்சலத்தில் முகம் மாறிய பிரேமலதா.. நடந்தது என்ன? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications