சென்னை மத்தியகைலாஷ் சிக்னல் அருகே சாலையில் மீண்டும் திடீரென தோன்றிய பள்ளம்.. வாகன ஓட்டிகள் பீதி!
Recommended Video
சென்னை: மத்தியகைலாஷ் சிக்னல் அருகே சாலையில் மீண்டும் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
சென்னை மத்திய கைலாஷ் சிக்னல் சென்னை மாநகரின் முக்கிய சிக்னலாக உள்ளது. மத்திய கைலாஷ் சிக்னலை கடந்துதான் ஓஎம்ஆர், ஈசிஆர், அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும்.
இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி மத்திய கைலாஷ் சிக்னல் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. முக்கிய சாலையில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் சிமென்ட் கொண்டு சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை அடைத்தனர். இந்நிலையில் நேற்றிரவு அதே இடத்தில் மீண்டும் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
இரண்டே வாரங்களில் அதே இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
"யாரும் பேசக்கூடாது".. கொஞ்ச நேரத்தில் உடைத்தெறியப்பட்ட அதிமுகவின் உத்தரவு
இதைத்தொடர்ந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் ஊழியர்கள் தடுப்புகளை அமைத்துள்ளனர். பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது சென்னை அண்ணா சாலையில் திடீர் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் மெட்ரோவுக்கு தொடர்பில்லாத மத்திய கைலாஷ் பகுதியில் பள்ளம் ஏற்பட்டிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.