"விடாமல் துரத்தும் திமுக".. 11 எம்எல்ஏக்களிடம்.. வீடியோ கான்பரன்ஸ் மூலம்.. சபாநாயகர் நாளை விசாரணை
சென்னை: அந்த 11 பேரை திமுக விடுவதாக இல்லை.. முக்கியமாக ஓபிஎஸ்ஸை ரவுண்டு கட்டி வருகிறது.. சுப்ரீம் கோர்ட் வரை சென்று 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை சூடுகிளப்பி பரபரப்பாக்கியதே திமுகதான்.. அந்த வகையில், 11 எம்எல்ஏக்களிடம் கோர்ட் உத்தரவிட்டபடி, சபாநாயகர் தனபால் நாளை விசாரணை நடத்த உள்ளார்... வீடியோ கான்பரன்ஸ் மூலம் 11 பேரிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளாராம்.. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது!
2017-ல் ஆரம்பித்த கேஸ் இது.. இன்னும் நடந்து வருகிறது.. சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
இவர்களை தகுதிநீக்கம் செய்ய கோரி அளிக்கப்பட்ட புகாரின் மீது சபாநாயகர் தனபாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இந்த விஷயத்தை திமுக கையில் எடுத்தது.. சென்னை ஹைகோர்டில் கேஸ் போட்டது.

சாதக தீர்ப்பு
இந்த வழக்கில் சபாநாயகருக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வந்தது- உடனே திமுக சுப்ரீம் கோர்ட்டுக்கு போனது.. புகாரின் மீது நடவடிக்கை எடுத்து சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரியில் தீர்ப்பும் வழங்கி இந்த கேஸை கோர்ட் முடித்து வைத்தது. பிறகு, ஓபிஎஸ் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட 11 எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.. அதோடு சரி, அது என்னவானது என்று தெரியவில்லை.

தீர்ப்பு
அதனால் பொறுத்து பொறுத்து பார்த்த திமுக, இந்த விவகாரத்தை மறுபடியும் சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு போனது.. தீர்ப்பு சொல்லி 3 மாசமாகியும் சபாநாயகர் எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் மனுவில் தெரிவித்தது.

விளக்கம்
இதனிடையே, இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு அளித்த விளக்கம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.. அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்களும் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அதிமுக-வுக்கு எதிராக செயல்படவில்லை. அதனால், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை என்று முதல்வர் கூறியிருந்தார்.

4 வார காலம்
எனினும் கோர்ட் 4 வாரங்களுக்குள் 11 எம்எல்ஏக்கள் பதிலளிக்கவும் , தமிழக சட்டசபை செயலாளர் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது தொடர்பாக சபாநாயகர் நாளை விசாரணை மேற்கொள்ள உள்ளார்... வீடியோ கான்பரன்ஸ் மூலம் சம்பந்தப்பட்ட 11 எம்எல்ஏக்களிடம் நாளை விசாரணை மேற்கொள்கிறார் சபாநாயகர் தனபால்.

வீடியோ கான்பரன்ஸ்
அப்போது, திமுக தரப்பு, சபாநாயகர் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது... அதுமட்டுமல்ல, 11 பேர் நிலை என்ன? முதல்வர் தந்த விளக்கம் எடுபடுமா? முக்கியமாக ஓபிஎஸ்-க்கு எதிராக இந்த விசாரணையின் முடிவு அமையுமா என்றெல்லாம் இனிதான் தெரியவரும்..எப்படி பார்த்தாலும் இந்த விஷயத்தை திமுக லேசில் விடாது என்று மட்டும் தெரிகிறது!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications