பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக.. அடேங்கப்பா கூட்டணி? ஓபிஎஸ் பேட்டியை பாருங்கள்!
Recommended Video

சென்னை: தமிழத்ததில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தலில் பழைய நண்பர்களுடன் கூட்டணி அமைக்க பாஜக தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பேசுகையில் தெரிவித்தார்.
ஏற்கனவே அதிமுக, பாமக, தேமுதிக ஆகியவை பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகளாகும். இந்த நிலையில் இக்கட்சிகள் பாஜகவுடன் கூட்டணிக்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேள்விகளும், ஓபிஎஸ் பதில்களும் என்ன என்பதை பாருங்கள்.
கே: கூட்டணி பேச்சுவார்த்தை என்ற அளவுக்குப் போய்க் கொண்டுள்ளது?
ப: தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடனடியாக பேசி, உடனடியாக முடிக்கப்படும்.

பாமக, தேமுதிக
கே: தமிழகம், புதுவை என, 20 தொகுதிகளில் அதிமுக, 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது என்றும், அந்த தொகுதிகளில் சிலவற்றை பாமக மற்றும் தேமுதிகவிற்கு வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வருகிறதே?
ப: பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு தொடர்பாக செய்திகள் வருகின்றன . அது அந்த அளவுக்கு உண்மை இல்லை. அதிகாரப்பூர்வமாக முடிவு ஏற்படுத்தப்பட்டு , முதலில் உங்களுக்கு தான் தகவல் தெரிவிக்கப்படும்.

மோடி வருகை
கே: பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம், தமிழகம் வருகை தருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள், கூட்டணி பேச்சுவார்த்தை நடக்குமா?
ப: எனக்கு தெரிந்தவரை பிரதமர் நரேந்திர மோடியின் வருகையும், சந்திப்பும், இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மோதலா
கே: சமீபகாலமாக அதிமுக மற்றும் பாஜக இடையே மிகப்பெரிய வார்த்தைப் போர் நடைபெறுகிறது. தமிழகத்தில் தாமரை மலராது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவிக்கிறார் . தமிழகத்தில் தாமரை மலருமா?
ப: அவரவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகள், அல்லது இயக்கங்கள் குறித்து கொள்கை விளக்கம் கொடுப்பது வாடிக்கை. அதைத்தான் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன.

எந்த கூட்டணி
கே: உத்தர பிரதேசத்தில் 3வது அணி அமைந்துள்ளது. நீங்கள் மூன்றாவது அணியுடன் கூட்டணி சேர்வீர்களா? அல்லது தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்களா?
ப: அவசரப்படாதீர்கள் . பொறுத்திருந்து பாருங்கள்.. நல்லது நடக்கும்.. இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications