தொகுதி பங்கீடு நடத்த அதிமுகவில் குழு அமைப்பு.. தேர்தலையொட்டி கமிட்டிகள் அமைத்து எடப்பாடி உத்தரவு!
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆகியவற்றை அமைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலர் இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்பி உதயகுமார், வைகைச்செல்வன் ஆகிய 10 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழுவை அமைத்துள்ளது அதிமுக.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன், முன்னாள் அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி, முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தேர்தல் பிரச்சாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைப்பு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. 1 (2) pic.twitter.com/nQMYzRRS5f
— AIADMK (@AIADMKOfficial) January 22, 2024
அதேபோல, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி வி ஆர் ராஜ் சத்யன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விபிபி பரமசிவம், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் ஆகியோர் அடங்கிய தேர்தல் விளம்பர பணிகளுக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications