அதிமுகவுக்கு வாக்களிக்க ஆதிதிராவிடர்கள்... ஆனா வழிகாட்டும் குழுவில் இடம் இல்லை... எம்பி ரவிகுமார்!!
சென்னை: அதிமுகவுக்கு வாக்களிக்க மட்டும் தான் ஆதி திராவிடர்கள், வழிகாட்டும் குழுவில் இடம் இல்லையா? என்று எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவர் தனது ட்விட்டர் பதிவில், ''அதிமுகவுக்கு வாக்களித்த ஆதிதிராவிடர்கள் புலம்புகிறார்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவின் வங்கியில் மிக முக்கியமான ஒரு சமூகமாக இருப்பது ஆதி திராவிடர் சமூகம், ஆனால், இப்போது அதிமுக அமைத்துள்ள குழுவில் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இடம் பெறவில்லையே ஏன்? என அதிமுகவைச் சார்ந்தவர்களே எம்மிடத்தில் புலம்புகின்றனர்.
அதிமுகவுக்கு வாக்களிக்க மட்டும்தானா நாங்கள்? வழிகாட்டுதல் குழுவில் எங்களுக்கு இடம் இல்லையா?இந்தக் கேள்வியை அவர்களால் கட்சியிலிருந்தே எழுப்ப இயலாமல், எம்மிடத்தில் கூறி வருந்துகின்றனர். இதற்கு அதிமுக என்ன பதில் சொல்லும்'' என்று பதிவிட்டுள்ளார்.
ஆஹான்... எங்களிடம் இரு தலைகள்... இரு இலைகள்.. பெரும் அலைகள்.. புல்லரிப்பில் அதிமுக தொண்டர்கள்!
அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி , எஸ்பி வேலுமணி , ஜெயக்குமார், சி.வி சண்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் , முன்னாள் எம் பி கோபால கிருஷ்ணன் , முன்னாள் அமைச்சர் மோகன் , சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஓபிஎஸ் சார்பில் 5 பேரும், ஈபிஎஸ் சார்பில் 6 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவுக்கு பன்னீர் செல்வம் தலைமை வகிப்பார். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் இல்லை.
அதிமுகவுக்கு வாக்களிக்க மட்டும்தான் ஆதி திராவிடர்கள், வழிகாட்டும் குழுவில் இடம் இல்லையா? pic.twitter.com/V1yiZKa4TJ
— Dr Ravikumar M P (@WriterRavikumar) October 7, 2020