”சாதி”யே அடிப்படை.. எம்எல்ஏக்கள் அவர் கண்ட்ரோல்! பழனிசாமிக்கு எதிராக முனுசாமி சதி -பொன்னையன் ஆடியோ
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் சாதி அடிப்படையில் பிரிந்து கிடப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு வெறும் 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவாக இருப்பதாகவும் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் தொடர்ந்த உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததை தொடர்ந்து சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று பிரம்மாண்டமாக கூடியது. ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர். பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

பொன்னையன் ஆடியோ
எடப்பாடி பழனிசாமி ஒரு வழியாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும், பொதுக்குழு நிகழ்வுகள் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அந்த வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பொன்னையனின் தொலைபேசி உரையாடலை பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சந்திப்பில் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகி எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

பணத்துக்காகவே தலைவர்கள்
கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கே.எஸ்.கோலப்பனிடம் பேசிய அதிமுக மூத்த உறுப்பினர் பொன்னையன், "தொண்டர்கள் இரட்டை இலை பின்னால் நிற்கிறார்கள். தலைவர்கள் பணத்துக்காக நிற்கிறார்கள். தங்கமணியும் மு.க.ஸ்டாலினை நாடுகிறார். கே.பி.முனுசாமியும் ஸ்டாலினை விமர்சிப்பதை நிறுத்துவதை நிறுத்திவிட்டார்.

சாதி அடிப்படையில் எம்.எல்.ஏக்கள்
துரைமுருகன் உதவியுடன் குவாரியை பெற்று 2 கோடியை மாதம் வருமானம் ஈட்டுகிறார் கே.பி.முனுசாமி. கொள்ளையடித்து கோடீஸ்வரனாக ஆடுகிறார்கள். சாதி அடிப்படையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பிரிந்து கிடக்கின்றனர். மேற்கு மாவட்டங்களில் உள்ள எம்.எல்.ஏக்களை தங்கமணியும், வேலுமணியும் பணம் கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்கள்.

கே.பி.முனுசாமி சதி
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சில எம்.எல்.ஏக்களை தங்கள் கையில் வைத்து இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவாக உள்ளார்கள். எம்.எல்.ஏக்கள் யாரும் அதிமுக தலைமைக்கு விசுவாசமாக இல்லை. கே.பி.முனுசாமியும் ஒற்றைத் தலைமைக்கு வர முயற்சி செய்தார். ஆட்சியிலிருந்தபோதே எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்களை கொள்ளையடிக்க எடப்பாடி பழனிசாமி விட்டுவிட்டார்.












Click it and Unblock the Notifications