கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!
கோவை: கொங்கு மண்டலம் எங்களின் எஃகு கோட்டை என்று மார்தட்டிக் கொள்ளும் அதிமுகவின் முகத்திரை, உட்கட்சிப் பூசலால் கோவையிலேயே கிழிந்து தொங்கத் தொடங்கியுள்ளதாக அதிமுக தொண்டர்களே புலம்பி வருகின்றனர். கோவை அதிமுக மாவட்ட செயலாளராகப் புதியதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட செ.ம.வேலுசாமியின் பதவியேற்பு விழாவை, முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ-வுமான எஸ்.பி. வேலுமணி வெளிப்படையாகப் புறக்கணித்த சம்பவம் அக்கட்சிக்குள் மையம் கொண்டிருந்த கோஷ்டி மோதலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான 'இதய தெய்வம் மாளிகையில்' ஞாயிறன்று புதிய மாவட்ட செயலாளர் செ.ம. வேலுசாமியின் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. இதில் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆனால், இந்த விழாவில் ஒட்டுமொத்த கோவை அதிமுகவையே இத்தனை காலமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் மாவட்ட செயலாளரான எஸ்.பி. வேலுமணியும், அவரது ஆதரவாளர்களும் பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக இருட்டடிப்பு செய்துள்ளனர்.

இந்த அதிரடிப் புறக்கணிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத புதிய மாவட்ட செயலாளர் வேலுசாமி, இது பொது மேடை, பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கூட மறந்துவிட்டு, தனது விரக்தியை மைக் பிடித்து வெளிப்படையாகவே புலம்பித் தீர்த்தது அங்கிருந்த அதிமுக தொண்டர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது. பொதுவெளியில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோவில், அனைவரையும் தான் நேரில் அழைத்ததாகக் கூறும் வேலுசாமி, தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்கள் வரவில்லை எனச் சமாளிக்க முயன்றாலும் அவரது குரலில் விரக்தி அப்பட்டமாகவே வெளிப்பட்டது.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, "வாட்ஸ்அப்பில் தேவையில்லாமல் ஒருவரையொருவர் டேமேஜ் செய்கிறார்கள், தயவுசெய்து கோஷ்டியாகச் செயல்பட வேண்டாம்" எனத் தனது கட்சியின் நிர்வாகிகளையே அவர் மன்றாடிக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதுதான் அதிமுகவின் தற்போதைய உச்சக்கட்ட அவல நிலை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமையின் கீழ் கட்டுக்கோப்பாக இருப்பதாகத் தலைமை தொடர்ந்து சொல்லி வருகிறது.
ஆனால், கட்சியின் அசைக்க முடியாத கோட்டை என அவர்கள் மார்தட்டிக்கொள்ளும் கோவையிலேயே 'வேலுமணி கோஷ்டி' என்றும், 'வேலுசாமி கோஷ்டி' என்றும் நிர்வாகிகள் இரு துருவங்களாகப் பிரிந்து கிடப்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
பதவியேற்பு விழாவிலேயே தலைமைக்கு சவால் விடும் வகையில் இப்படி ஒரு புறக்கணிப்பு அரசியல் அரங்கேறியுள்ள நிலையில், இனி வரும் தேர்தல் காலங்களில் இவர்கள் எப்படி இணைந்து செயல்படுவார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. தலைவர்களின் இந்த ஈகோ யுத்தத்தையும், பனிப்போரையும் பார்த்து, அடுத்து என்ன நடக்குமோ என்ற கலக்கத்தில் அடிமட்டத் தொண்டர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்














Click it and Unblock the Notifications