15தான் கறார் காட்டும் அதிமுக... 25 கேட்கும் தேமுதிக - இன்றும் பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருமா
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 15 தொகுதிகளைத் தர அதிமுக முடிவு செய்துள்ளது. 25 தொகுதிகளாவது தரவேண்டும் என்று தேமுதிக பட்டியலை கொடுத்துள்ளது. இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவ
சென்னை: அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் கூறியுள்ளார். இன்று மாலை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 15 தொகுதிகளைத் தர அதிமுக முடிவு செய்துள்ளது. 25 தொகுதிகளாவது தரவேண்டும் என்று தேமுதிக பட்டியலை கொடுத்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக திமுகவில் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொகுதிப்பங்கீடு நடைபெற்று வருகிறது. திமுகவில் காங்கிரஸ் கட்சியுடன் இழுபறி என்றால் அதிமுகவில் தேமுதிகவில் இழுபறி நீடிக்கிறது.

அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பெரிய கட்சிகளான பாமகவிற்கு 23 தொகுதிகளையும், பாஜகவிற்கு 20 தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளது அதிமுக. 41 தொகுதிகளைக் கேட்ட தேமுதிக 25 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளது. இரண்டு நாள் நடந்த பேச்சுவார்த்தை இறுதி முடிவு எட்டப்படாமலேயே முடிந்து விட்டன.

புறக்கணித்த தேமுதிக
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகதான் அதிகம் பிடிவாதம் பிடிக்கிறது. 25 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்துள்ளது. பாமகவிற்கு 23 ஒதுக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது தேமுதிக.

15+1 ஓகேவா?
அதே நேரத்தில் அதிமுகவோ ஏற்கனவே 48 தொகுதிகளை சுளையாக இரண்டு கட்சிகளுக்கு கொடுத்து விட்டது. தேமுதிகவிற்கும் 25 கொடுத்து விட்டால் தமகா உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என நினைக்கிறது. 15 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா எம்.பி பதவியையும் விட்டுத்தர முன் வந்துள்ளது அதிமுக.

நேர்காணலை ஆரம்பித்த தேமுதிக
அதிமுக தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறார் விஜயகாந்த். அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார். தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படுமா? ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? பார்க்கலாம்.
-
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள்












Click it and Unblock the Notifications