பேச்சு சுதந்திரம் மீதான தாக்குதல்.. உண்மை சரிபார்ப்பு குழு அமைத்த அரசாணைக்கு எதிராக அதிமுக வழக்கு
சென்னை: உண்மை சரிபார்ப்பு குழு அமைத்த தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து அதிமுக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. பேச்சு சுதந்திரம் மீதான தாக்குதல் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் குரலை ஒடுக்கும் முயற்சி என்று தனது மனுவில் அதிமுக தெரிவித்துள்ளது.
உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அண்மையில் அமைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின் கீழ் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பணி என்னவென்றால் அனைத்து ஊடக தளங்களிலும் தமிழக அரசு மற்றும் அமைச்சகங்கள் அதன் துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான மற்றும் உண்மை தன்மையற்ற செய்திகளை கண்டறியும் என கூறப்பட்டுள்ளது.

இந்த உண்மை சரிபார்ப்புக் குழுவில் 80 பேர் இடம் பெற்று இருப்பார்கள் எனவும் இந்தக் குழுவின் Central Task Force தலைநகர் சென்னையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அரசு, அமைச்சகங்கள் மற்றும் அதன் துறைகள் சார்ந்து 'அனைத்து தளங்களிலும்' வெளியாகக் கூடிய எந்தத் தகவல்களாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை இந்தக் குழு சரிபார்க்கும்' எனவும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டப்பட்டு இருந்தது.
இந்த உண்மை சரிபார்ப்புக் குழு தாமாக முன்வந்து தகவல்களை சரிபார்க்கும் என்றும் தகவல்கள் சார்ந்து பெறப்படும் புகார்களை விசாரிக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது. இந்த உண்மை சரிபார்ப்புக் குழுவின் திட்ட இயக்குநராக 'YOUTURN' சேனலின் முன்னாள் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐயன் கார்த்திகேயன் நியமனம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
இந்த நிலையில்தான், உண்மை சரிபார்ப்பு குழு அமைத்த தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து அதிமுக பொது நல வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளது. அதிமுக தரப்பில் அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் நிர்மல் குமார் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். பேச்சு சுதந்திரம் மீதான தாக்குதல் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் குரலை ஒடுக்கும் முயற்சி என்று அதிமுக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. அதிமுக தரப்பில் தொடர்ந்துள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications