ஊழியர்களின் திடீர் லீவு.. ஏர் இந்தியா விமான சேவை கடும் பாதிப்பு! பஞ்சாயத்தை தீர்க்குமா நிர்வாகம்
சென்னை: ஏர் இந்தியா ஊழியர்களின் போராட்டம் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விமான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் அவ்வப்போது பஞ்சாயத்துகள் வெடித்து வந்திருக்கின்றன. இந்நிலையில், இன்று திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஏராளமான ஊழியர்கள் மருத்துவ விடுப்பை எடுத்திருக்கின்றனர். இதனால், ஏர் இந்தியாவின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் பல தாமதமாக புறப்பட்டு சென்றிருக்கின்றன. அதேபோல 78 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பெங்களூரு, தில்லி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனவே பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சில விமான நிலையங்களில் பயணிகள் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஏர் இந்தியாவின் செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,
"நேற்றிரவு முதல் எங்கள் ஊழியர்கள் திடீரென மருத்துவ விடுப்பு எடுத்திருக்கிறார்கள். எனவே விமான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இந்த சிரமத்திற்காக நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறோம்.
முன்பதிவு செய்த அனைத்து பயணிகளுக்கும் பயணத்திற்கான பணத்தை திரும்ப கொடுக்க தயாராக இருக்கிறோம். அல்லது அவர்கள் வேறு நாட்களில் பயணம் மேற்கொள்ள முன்வந்தால் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க தயார். ஊழியர்கள் விடுப்பில் சென்றுள்ள விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம். பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னர் விமானங்கள் இயங்குவதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா நிறுவனத்திடம் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா, டாடா வசம் சென்றதிலிருந்து பிரச்னைகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. குறிப்பாக ஏர் இந்தியா நிர்வாகத்திற்கும், கேபின் க்ரூ ஊழியர்களுக்கும் இடையே பெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு, ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இருப்பினும் இந்த பஞ்சாயத்து தீர்க்கப்படவில்லை. எனவேதான் இந்த திடீர் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது என்று சொல்லப்படுகிறது. ஊழியர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இருக்கும் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications