Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நாம் எல்லோருமே பொறுப்பு”.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மனம் திறந்த நடிகர் அஜித்குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய நடந்துவிட்டது, கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் அளவு கடந்த எல்லையற்ற அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது. இந்த ஊடகங்களும் படங்களின் முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்கள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என பெரிதாக்கி காட்டுகிறது இது ரசிகர்கள் மனதை மாற்றுகிறது. அன்பு வையுங்கள் போதும் என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Ajith kumar karur stampede vijay

நடிகர் அஜித் படங்களில் நடிப்பதை தாண்டி கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கார் ரேஸ் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய அவர் சில கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று வந்திருந்தார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் குமார் அளித்திருக்கும் ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. அதில் கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக அஜித் பேசி இருக்கிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். (Ajith on karur incident)

அந்த பேட்டியில், "கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய நடந்து விட்டது, கரூர் சம்பவத்திற்கு அந்த தனி நபர் மட்டுமே பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு. நமக்கான கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, கூட்டத்தை கூட்டுவதில் வெறி கொண்ட ஒரு சமூகமாக நாம் மாறிவிட்டோம். இது முடிவுக்கு வர வேண்டும்.

கிரிக்கெட் போட்டிக்கும் கூட்டம் கூடுகிறது, ஆனால் அங்கே இதெல்லாம் நடக்காது. ஏன் இந்த துயரம் தியேட்டரில் மட்டும் நடக்குது? ஏன் சினிமா பிரபலங்களுக்கு மட்டும் நடக்கிறது? இது முழு சினிமா துறையையும் தவறான முறையில் பிம்பப்படுத்துகிறது. ரசிகர்களின் அளவு கடந்த எல்லையற்ற அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது.

இந்த மீடியாவும் படங்களின் முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்கள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என பெரிதாக்கி காட்டுகிறது. இது ரசிகர்கள் மனதை மாற்றுகிறது. அன்பு வையுங்கள் போதும். உங்கள் அன்பைக் காட்டுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றன." என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், "ரசிகர்கள் என் மீது பொழியும் அன்புக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். ஆனால் அதே அன்பு காரணமாகத்தான் நான் குடும்பத்துடன் வெளியில் செல்வதில்லை. என் மகனை கூட நான் பள்ளிக்கு கொண்டு சென்று விட முடியாத நிலை இருக்கிறது" என அஜித் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+