மாஸ்க் அணியாமல் சிக்கிய 3,000 நபர்கள்! தமிழகம் முழுவதும் அபராத வேட்டை! கொரோனா பற்றி அஜாக்கிரதை!
சென்னை: கொரோனா மீண்டும் பரவி வரும் சூழலில் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணியாத ஆயிரக்கணக்கானோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 3,000 பேர் மாஸ்க் அணியாமல் அரசுக்கு அபராதத் தொகையை கப்பம் கட்டிவிட்டு சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல்
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா இப்போது மீண்டும் மெல்ல பரவத் தொடகியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் மாஸ்க் அணிவதை அரசு தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. சென்னையில் மாஸ்ட் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் என்றெல்லாம் கூட அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் கொரோனா நம்மை என்ன செய்துவிடும் என்ற அஜாக்கிரதையில் பெரும்பாலானோர் மாஸ்க் அணிவதில்லை.

அதிகாரிகள் கெடுபிடி
இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் மாஸ்க் விவகாரத்தில் சற்று கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பொதுவிடங்களில் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்த 3,000 பேரிடம் நேற்று ஒரே நாளில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதற்கெல்லாம் சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என்பவர்களை போல் மிகவும் ஹாயாக வலம் வருகின்றனர் பலர்.

சென்னையில் மட்டும்
சென்னையில் மட்டும் ஒரே நாளில் 121 பேர் முக கவசம் அணியாமல் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை மட்டும் 60 ஆயிரத்து 500 ரூபாயாகும். சென்னையிலேயே இப்படி என்றால் கோவை, திருச்சி, மதுரை, போன்ற பெரு நகரங்களில் முக கவசம் அணியாமல் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

விழிப்புணர்வு இல்லை
என்ன தான் அபராதம் போட்டு வசூலித்தாலும் கொரோனா பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் இப்போது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. முன்பை போல் கொரோனாவுக்கு அஞ்சி வீட்டில் முடங்காமல் வரட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்கிற வகையில் தான் ஒவ்வொருவரும் தங்களின் வாழ்வாதாரத்தை தேடி ஓடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications