தலைமறைவா? அதெல்லாம் இல்லீங்க.. டெல்லியில்தான் இருந்தேன்! அமர் பிரசாத் ரெட்டி விளக்கம்
சென்னை: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், அவருக்கு நேற்று முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தான் தலைமறைவாக இல்லையென்றும், டெல்லியில் முக்கிய பணியாற்றிக்கொண்டிருந்ததாகவும் அமர் பிரசாத் ரெட்டி கூறியுள்ளார்.
பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 போ் மீது கோட்டூர்புரம் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம், உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்த காரணத்தால் போலீசாரால் அவரை பிடிக்க முடியவில்லை.

மறுபுறம் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது இந்த பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கில் நேற்று அமர் பிரசாத் ரெட்டிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை திரும்பிய அவர், தான் தலைமறைவாக இருக்கவில்லை என்றும், டெல்லியில் முக்கிய வேலையில் இருந்ததாகவும் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, "டெல்லியில் முக்கியமான வேலையாக இருந்தேன். தலைவர் கொடுத்த வேலையை செய்து கொண்டிருந்தேன்.
போன முறை என்னை கைது செய்யும்போது, என்னிடம் ரூ.20,000 கோடி இருப்பதாக ஆளும் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பல்வேறு செய்தித்தாள்களிலும் இந்த செய்தி வெளியானது. ஆனால் தற்போது இந்த தொகை வெறும் ரூ. 50,000 ஆக குறைந்திருக்கிறது. நியாயப்படி பார்த்தால் ரூ.50,000 கோடி இருக்கிறது என்று தான் குற்றச்சாட்டு எழுந்திருக்க வேண்டும். ஆனால் வெறும் ரூ.50,000 என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மகாத்மா காந்தியே தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் கூட அவர் மீதும் திமுக அரசு 10 பொய் வழக்குகளை போட்டிருக்கும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதே தெரிந்து இருக்காது. மீண்டும் இரண்டு வழக்குகள் என் மீது பதிய ரெடியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. யார் வீட்டிலாவது தண்ணீர் வரவில்லை என்றால் கூட அதற்கும் என் மீது தான் வழக்கு போடுவார்கள் போல..
தலைமறைவாக இருந்தேன் என்று சொல்கிறார்கள், ஆனால் காவல்துறை அதிகாரிகளுக்கு நான் தொடர்ச்சியாக 10 முறை ஃபோன் அடித்திருக்கிறேன். அவர்கள் என்னுடைய போனை எடுக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
-
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
ஆந்திர மாடல்.. விஜயை வைத்து பாஜக போட்ட பலே ப்ளான்! எண்ட் கார்டு போட்ட பனையூர்! அவ்வளவு தானா? -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில்












Click it and Unblock the Notifications