ஆம்பூர் பிரியாணியை ருசித்த ராஜீவ் காந்தி.. பிரியாணி மாஸ்டரை கையோடு டெல்லி அழைத்து சென்ற ருசிகரம்
சென்னை: 1988 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆம்பூர் பிரியாணியை சாப்பிட்டு அதை சமைத்த மாஸ்டரை கையோடு டெல்லி அழைத்துச் சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
சைவ பிரியர்களாக இருந்தாலும் அசைவ பிரியர்களாக இருந்தாலும் பிரியாணிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ட்ரீட் என்றாலே பிரியாணிதான்.. அந்த அளவுக்கு பிரியாணி நம்முடன் இரண்டற கலந்து விட்டது.
எத்தனையோ ஊர்கள் பிரியாணிக்கு பெயர் பெற்றிருந்தாலும், ஆம்பூரில் செய்யப்படும் பிரியாணிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. வார இறுதி நாட்களில் பிரியாணி சாப்பிடுவதற்காகவே ஆம்பூருக்கு செல்வோர் நிறைய பேர் இருக்கிறார்கள்.

திருப்பதி லட்டு
திருப்பதியில் விற்கப்படும் லட்டு என ஏமாற்றி விற்கப்பட்டாலும் அதை அவ்வப்போது சாப்பிடுவோருக்கு நன்றாக தெரியும், அது அசலா போலியா என்பது! அது போல் ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் ஆம்பூர் பிரியாணி என கூறி எத்தனை கடைகள் புற்றீசல் போல் முளைத்தாலும் ஆம்பூர் பிரியாணியின் தனித்தன்மை மற்றும் ருசியால் அந்த பிரியாணி தனித்து நிற்கிறது.

தரமான பொருட்கள்
ஆம்பூரில் செய்யும் பிரியாணியில் தரமான கோழி, ஆட்டிறைச்சி, உயர் ரக பாஸ்மதி அரிசி, தரமான மசாலா பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பிரியாணி செய்யப்படுகிறது. இந்த பிரியாணியில் பாலாற்று நீர் கலக்கப்படுவதால் அதன் சுவை மாறாமல் இருக்கிறது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் பிரியாணி சாப்பிட ஆம்பூருக்கு நிறைய பேர் வருகிறார்கள்.

ராஜீவ் வீட்டில் தங்கிய பிரியாணி மாஸ்டர்
அந்த வகையில் 1988 ஆம் ஆண்டு வாணியம்பாடிக்கு ஒரு அரசியல் நிகழ்ச்சிக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வருகை தந்தார். அப்போது அவருக்கு ஆம்பூர் பிரியாணி பரிமாறப்பட்டது. அந்த சுவையில் மெய் மறந்த அவர் டெல்லி செல்லும் போது அந்த பிரியாணியை சமைத்த மாஸ்டரையும் அழைத்து சென்றாராம்.

ரஜினிக்கும் பிடித்த பிரியாணி
டெல்லியில் தன் வீட்டில் 4 மாதங்கள் அந்த மாஸ்டரை தங்க வைத்து அவர் கையால் பிரியாணி சாப்பிட்டு மகிழ்ந்தாராம். அது போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் அந்த பிரியாணி கவர்ந்ததாம். எந்திரன் படப்பிடிப்புக்காக வேலூர் சென்ற போது ஆம்பூர் பிரியாணியை சாப்பிட்ட ரஜினி அசந்து போனாராம். கர்நாடகா நவாப்களிடம் இருந்து கற்றுக் கொண்ட பிரியாணி வித்தையால்தான் ஆம்பூர் பிரியாணியே மணக்கிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications