சென்னையில் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்தும் 14 வயது அமெரிக்க சிறுமி சியோனா!
சென்னை: அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு பல்வேறு இடர்களை தாண்டி சென்னை வந்துள்ள 14 வயது சிறுமியை பரதநாட்டிய நிகழ்வு இன்று ராணி சீதை மஹாலில் நடைபெறுகிறது.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் நேபர்வில்லேவை சேர்ந்தவர் சியோனா ஆயக்காட். 14 வயதாகும் இந்த சிறுமிக்கு தமிழகத்தின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் என்றால் கொள்ளை பிரியம்.
இவர் சுமார் 9 ஆண்டுகளாக சிகாகோவில் பரத நாட்டியம் கற்று வருகிறார். இவருடைய குரு அமெரிக்க அதிபர் விருதை பெற்ற ஷோபா நடராஜன் ஆவார். இவரது நாட்டிய அரங்கேற்றம் சென்னை ராணி சீதை மஹாலில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்காவில் பனிப்புயல், விமானங்கள் ரத்து, உடமைகளை மாயம் உள்ளிட்ட பல்வேறு இடர்களை துணிச்சலாக கடந்து வந்துள்ளார். இவர் முதலில் புஷ்பாஞ்சலி செய்தார். இது முழு முதற்கடவுளான பிள்ளையாரை வணங்குவதாகும்.
நாம் செய்யும் காரியத்தில் உள்ள இடர்களை கணபதி போக்குவார் என்பதால் முதலில் எப்போதும் விநாயகரை வணங்க வேண்டும். அடுத்ததாக திருப்புகழ் நடனமாடினார். இதன் பின்னர் தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த வள்ளி கல்யாணத்தை அரங்கேற்றினார்.
பின்னர் கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை நடனம் மூலம் சித்தரித்தார். அது போல் கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்குவது உள்ளிட்டவைகளை நடித்து காட்டினார். பாடலின் பாவங்கள், ரசங்கள், லயங்கள், ராகங்களுக்கு சியோனா உயிர் கொடுத்தார். இதனால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.
பரதநாட்டிய கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மிகவும் பரிட்சயமான சின்னஞ்சிறு கிளியே பாடலுக்கும் நடனமாடினார். நடனக் கடவுளான நடராஜருக்கு தில்லானா ராகம் மூலம் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியின் முடிவில் மங்கலம் நிகழ்த்தப்பட்டது. சியோனாவின் குருவான ஷோபா நடராஜன் இந்த நிகழ்ச்சியில் முக்கிய பங்காற்றி வெற்றி பெற செய்தார். இவரிடம் குச்சிப்புடி நடனத்தையும் சியோனா கற்று வருகிறார்.
தனது அரங்கேற்றத்தை இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடத்த வேண்டும் என கனவுடன் பயணித்த சியோனா அதை சாதித்தும் காட்டி விட்டார். இவரது நடனம் அமெரிக்கா முதல் இந்தியா இடையே ஒரு பாலமாக அமைந்துவிட்டது. உலகம் முழுவதும் தமிழகத்தின் பாரம்பரிய நடனத்தை பரப்பியுள்ளார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications