கொட்டும் கனமழை! திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: கனமழை காரணமாகத் திருவாரூர் மாவட்டத்தில் நாளைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்றைய தினம் அந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
இந்தச் சூழலில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் நாளைய தினம் (பிப். 12) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி வெளியிட்டார்.

இன்று மாலை தொடங்கி திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னதாக, தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications