புதுச்சேரி பண்ணைவீட்டில் ஓய்வெடுக்கும் டிடிவி தினகரன்... திடீர் அமைதிக்கான பின்னணி
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதுச்சேரி பொம்மையார்பாளையத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டது முதல் டிடிவி தினகரன் கட்சி தொடர்பான அனைத்து பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு முழு ஓய்வில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் தொலைபேசி மூலம் அழைத்துப் பேசும் இவர், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்குமாறு அவர்களிடம் அறிவுறுத்தி வருகிறார்.

இதனிடையே திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், உட்பட இன்னும் பல அரசியல் கட்சிகள் அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சமூக இடைவெளியுடன் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி நாளை கூட திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் போராட்டம் நடத்த இருக்கின்றன.
இந்நிலையில் டிடிவி தினகரன் இது தொடர்பான விவகாரங்களில் அறிக்கைகள் வெளியிட்டாலும் அதில் முன்பிருந்த காரசாரமான வார்த்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென டிடிவி தினகரன் அமைதி காப்பதன் பின்னணியில் சசிகலாவும் சுப்பிரமணிய சுவாமியும் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சுப்பிரமணியசுவாமி அறிவுறுத்தலின் பேரில் அதிமுக அரசு மீதான அட்டாக்கை டிடிவி தினகரன் சற்று குறைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இது தொடர்பாக அமமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, அதுபோன்றெல்லாம் இல்லை என்றும், கொரோனா காலத்தில் அதை வைத்து அரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமான பணிகளை தினகரன் கவனிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், நிர்வாகிகளோடு அவர் தொடர்ந்து தொலைபேசி மூலம் பேசி களநிலவரத்தை அப்டேட் செய்துகொள்வதாகவும் கூறினார்.
-
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications