Exclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி
சென்னை: காசு, பணத்தை எதிர்பார்த்து அ.ம.மு.க.வில் தாம் இல்லை என்றும், நம்பக்கூடாத சிலரை டிடிவி நம்பியது தான் அவர் செய்த தவறு எனவும் அமமுக அமைப்புச் செயலாளரும், நடிகருமான செந்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;

கேள்வி: அமமுகவில் அமைப்புச் செயலாளர் பதவி கிடைத்திருக்கிறது, இதை வைத்து என்ன செய்வீர்கள்?
பதில்: எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்தவன் நான். அவர் மறைவுக்கு பிறகும் அம்மாவின் வழியில் தொடர்ந்து கட்சியில் பயணித்தேன். தமிழகம் முழுவதும் நட்சத்திரப் பேச்சாளராக அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்திருக்கிறேன். காலத்தின் தேவையால் அமமுகவை தொடங்கிய தினகரன், ஏற்கனவே என்னை அமைப்புச்செயலாளராக நியமித்திருந்தார். இந்நிலையில் இப்போது அறிவிக்கப்பட்ட புதிய பட்டியலிலும் எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்திருக்கிறார். அதனால் ஒரு தொண்டனாக கட்சி வளர்ச்சிக்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் கீழிறங்கி செய்வேன்.
கேள்வி: அ.ம.மு.க.வில் என்ன தான் நடக்கிறது? தொடர்ந்து நிர்வாகிகள் வெளியேற என்னக் காரணம்?
பதில்: எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பின்பு, அம்மா அணியில் இருந்த கோவை தம்பி, கருப்பசாமி பாண்டியன், சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றனர். அப்போதும் இதேபோல் தான் ஜெயலலிதா அணியில் இருந்து நிர்வாகிகள் ஓட்டம் எனக் கூறப்பட்டது. ஆனால் அம்மா மீண்டெழுந்து ஆட்சியை பிடிக்கவில்லையா..அது போல் தான் இன்றும், சிலர் பணக்காரர்கள் ஆக வேண்டும் என்ற ஆசையில் அமமுகவுக்கு வந்திருக்கக் கூடும், அது நிறைவேறாது எனத் தெரிந்தவுடன் சென்றிருக்கலாம் எனக் கருதுகிறேன். அதாவது வெற்றியோ, தோல்வியோ ஒரே தலைமையை ஏற்கும் பண்பு வேண்டும்.
கேள்வி: மீண்டும் சினிமா நாடகம் என்று நடிக்க தொடங்கிவிட்டீர்கள்..அப்ப கட்சிப்பணி என்னாவது?
பதில்: நடிப்பு தான் என்னை மக்களிடம் கொண்டு செல்கிறது, அதை எப்படி விட முடியும். அரசியலும், சினிமாவும் எனக்கு இரண்டு கண்கள். காசு, பணத்தை எதிர்பார்த்து நான் அ.ம.மு.க.வில் இல்லை. உழைத்தால் தானே பணம் கிடைக்கும். நடிப்பு போக கட்சி நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொள்வேன்.

கேள்வி: அதிமுக-அமமுக இணைய வாய்ப்பு உள்ளதா?
பதில்: இந்த விஷயத்தில் சின்னம்மாவும், டிடிவியும் என்ன முடிவு எடுக்கிறார்களோ அது தான் எனது முடிவும். இணைந்தால் நன்றாக தான் இருக்கும்.
கேள்வி: ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். பற்றி உங்கள் கருத்து?
பதில்: என்னதான் இருந்தாலும் தமிழகத்தில் அம்மாவால் உருவாக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு என்பதெல்லாம் மக்களை வெறுப்படையச் செய்துள்ளது. அம்மா வழியில் ஆட்சி எனக் கூறுகிறார்கள், இதெல்லாம் கொண்டுவரச்சொல்லி அம்மாவா சொன்னார்.
கேள்வி: டிடிவி தினகரன் உங்களுக்கு ஏதாவது அறிவுறுத்தியுள்ளாரா?
பதில்: ஆலோசனை, அறிவுறுத்தல் என்பது அரசியல் கட்சிகளில் இயல்பானது. கட்சியில் நம்பக்கூடாத சிலரை நம்பியதே தினகரன் செய்த தவறு. சிலரை நம்பி அவர்களுக்கு பொறுப்பு வழங்கி வளர்த்துவிட்டார், அவர்கள் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications