Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டணி முடிவு பண்ணும் முன்பே டிடிவி தினகரன் எடுத்த முடிவு.. கட்சியினருக்கு பறந்த அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 10 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவும் என்பது உறுதியாகியுள்ளது.

ammk-to-accept-applications-from-december-10-announcement-by-ttv-dhinakaran

விஜய்யுடன் கூட்டணியா?

திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக - பாஜக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி, விஜய்யின் தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. எனினும், தேர்தல் நெருங்கும் போது இதில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் எந்த கூட்டணியில் செல்வார்கள்? இல்லை தனித்து போட்டியிடுவார்களா? என்பது தெரியவில்லை. விஜய் கட்சியில் டிடிவி தினகரன் இணையலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில், தவெகவில் இணைந்த செங்கோட்டையன் இது தொடர்பாக தங்களை இதுவரை அழைத்து பேசவில்லை என்று டிடிவி தினகரன் கூறினார்.

டிடிவி தினகரன் அறிவிப்பு

அதேபோல தேர்தல் நேரத்தில் புதிய கூட்டணி கூட அமையலாம் என்றும் டிடிவி தினகரன் தனது பேட்டியில் அவ்வப்போது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். இதனால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த கூட்டணியில் இணையும் என்பது இன்னும் யூகிக்க முடியவில்லை.

பாஜக ஒருபக்கம் அழுத்தம் கொடுப்பதாகவும் சொல்லப்படும் நிலையில்தான் இன்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவை பெறலாம் என்று டிடிவி தினகரன் தனது கட்சியினருக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விருப்ப மனு அளிக்கலாம்

'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 18.12.2025 (வியாழக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+