தமிழகம் இந்தியாவில்தானே இருக்கு?.. கேரளத்துக்கு சென்ற பிரதமர் தமிழகத்துக்கு வராதது ஏன்?- அன்புமணி
Recommended Video

சென்னை: தமிழகம் இந்தியாவில் தான் உள்ளதா? , கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா சென்ற பிரதமர் தமிழகம் வராதது ஏன்? என சென்னை அம்பத்தூரில் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அம்பத்தூரில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணைக் கட்ட கர்நாடக அரசு கொடுத்த ஆய்வறிக்கையை பெற்று கொண்டு முதல் கட்ட ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
அது தமிழகத்திற்கு எதிரானது , சட்டத்திற்கு எதிரானது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது ,காவேரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது தமிழக அரசை கேட்காமல் காவிரியில் எதுவும் செய்யக் கூடாது என சட்டம் உள்ளது.

உச்சநீதிமன்றம்
இருந்த போதும் ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி கொடுத்தது. அரசியல் நோக்கத்திற்காக, தேர்தலுக்காக தமிழகத்திற்கு எதிரான செயலாக நான் பார்க்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்க வேண்டும்.

மத்திய அரசு
ஆய்வு செய்ய மத்திய அரசு கொடுத்த ஆணையை திரும்ப பெற வேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த வேண்டும். தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பொருட்படுத்தாமல் மத்திய அரசு செயல்படுகிறது.

குரல்
அணைகள் காக்கும் சட்ட மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. அவ்வாறு மசோதா நிறைவேற்றப்பட்டால் முல்லைபெரியாறு உள்ளிட்ட மூன்று அணைகள் தமிழகத்தை விட்டு சென்று விடும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக சந்திக்காமல் கடமைக்காக முதல்வர் சந்திக்கிறார் போர்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைப்பெற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தேர்தல்
தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக பாமக உள்ளது. அமைதியான முறையில் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். இடைத்தேர்தல் நடைபெறாது, நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும். எந்த நேரத்திலும் தேர்தலை எதிர் கொள்ள பாமக தயாராக உள்ளது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

இந்தியாவிலா இருக்கு
பலவீனமான முதலமைச்சர், அடிமை முதலமைச்சர் தமிழகத்தில் உள்ளதால் பிரதமர் புயல் சேதங்களை பார்வையிட தமிழகம் வரவில்லை. கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவை பார்வையிட்ட பிரதமர் தமிழகத்திற்கு வரவில்லை என்றாலும் உள்துறை அமைச்சராவது வந்து பார்த்து இருக்கலாம். தமிழகம் இந்தியாவில் உள்ளதா என்று சந்தேகம் எழுவதாகஅன்புமணி தெரிவித்தார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications