அந்தப் பேச்சே வேண்டாம்! கட் அன்ட் ரைட் அன்புமணி! மவுனமான பாமக நிர்வாகிகள்!
சென்னை: பாமக பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராகவோ அல்லது தலைவராகவோ அறிவிக்கப்படலாம் என ஆருடங்கள் கூறப்பட்ட நிலையில் அது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.
ஜி.கே.மணியிடமே பாமக தலைவர் பதவி இருக்கட்டும் என்பது தான் அன்புமணி ராமதாஸின் விருப்பமாம்.
இதனிடையே பாமக மக்கள் பிரதிநிதியும், மேல்மட்ட நிர்வாகியுமான ஒருவரிடம் அன்புமணிக்கு கட்சியில் வழங்கப்பட வேண்டிய புரோமோஷன் பற்றி நாம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது;

சின்ன அய்யா
''சின்ன அய்யாவுக்கு தலைவர் ஆவதற்கான எல்லா திறமையும் தகுதியும் இருக்கிறது. அவரை தலைவராக்க வேண்டும் என தொண்டர்களும், கட்சியில் உள்ள இளைஞர்களும் விரும்புவது உண்மைதான். ஆனால் சின்ன அய்யா அதனை விரும்பவில்லை. ஜி.கே.மணியிடமே பாமக தலைவர் பதவி இருக்கட்டும் என்பது தான் அவர் விருப்பம். அவரிடமுள்ள அந்தப் பதவியை தாம் அடைய வேண்டும் என துளியும் சின்ன அய்யா நினைக்கவில்லை.''

தலைவர் பதவி
''இன்னும் சொல்லப்போனால் பாமக புத்தாண்டு பொதுக்குழுவில் தன்னை தலைவராக்க வேண்டும் என்ற டாபிக்கையே யாரும் பேசக்கூடாது எனச் சொல்லிவிட்டார். அந்தளவுக்கு அவர் நாகரிகமாக நடந்துகொள்கிறார். சின்ன அய்யாவை பொறுத்தவரை எப்போதுமே பதவி ஆசை இல்லாதவர். அதனால் தான் தன்னை தலைவராக்க வேண்டும் என்ற பேச்சையே எடுக்க வேண்டாம் என கறாராக கூறிவிட்டார். அவருடைய சிந்தனை எல்லாம் பாமகவை இன்னும் வலிமைப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது தான்.''

இது தான் உண்மை
''ஊடகங்களில் செய்தி வெளியிடுவது போல், கட்சி தலைவராக வேண்டும் என சின்ன அய்யா எப்போதும் ஆசைப்படவில்லை. தலைவர் பதவி வேண்டாம் என்கிற எந்த அரசியல்வாதியையாவது பார்த்திருப்பீர்களா, அது தான் எங்கள் சின்ன அய்யா. இதை வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை, அவருடனேயே பயணிப்பவன் என்ற முறையில் சொல்கிறேன். இது தான் உண்மை.'' என அன்புமணி ராமதாசுக்கு வழங்கப்பட வேண்டிய புரோமோஷன் பற்றி கூறினார் அந்த முக்கியப் பிரமுகர்.

எதிர்பார்ப்பு
பாமக தலைவர் பதவியை அன்புமணி ராமதாஸ் விரும்பாவிட்டாலும் கூட கட்சியில் உள்ள இளசுகள் பலரும், அவருக்கு அடுத்தக் கட்ட புரோமோஷன் வழங்க வேண்டும் என்பதை தான் எதிர்பார்க்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாமகவில் அமைப்பு ரீதியாக மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications