ஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது புகார்
Recommended Video

சென்னை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது கால்நடை மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கால்நடை மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்.கே. மிட்டல் மற்றும் அவரது குழுவினர் மிரட்டல் விடுத்தனர் என்பது புகார் ஆகும். இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் தணிகைவேலு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேசியதாவது:

மதுரை மாவட்டம் பாலமேட்டில் கடந்த 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக போட்டியில் பங்கேற்க வந்த காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மத்திய கண்காணிப்பு குழு மற்றும் விலங்குகள் நல வாரிய உறுப்பினருமான எஸ்.கே. மிட்டல் , மருத்துவக்குழுவினரை கொன்று விடுவேன் என மிரட்டினார்.
அவருடைய செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆய்வு செய்ய வரும் போது சொகுசு அறை, சொகுசு கார்கள் ஏற்பாடு செய்ய சொல்வதுடன், மருத்துவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.
எனவே தமிழக அரசு எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதுடன், எஸ்.கே.மிட்டல் மற்றும் அவருடன் வந்த குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீது உரிய நடவடிக்கை இல்லையென்றால் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது பணி புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications