யார் அந்த "சார்.." ரொம்ப சந்தேகமா இருக்கு.. அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரம்! திருமாவளவன் பரபர
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் "சார்" ஒருவருடன் பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது. இதற்கிடையே திமுக கூட்டணிக் கட்சியான விசிக தலைவர் திருமாவளவனும் இதே கருத்தைக் கூறியிருக்கிறார். மேலும், நேர்மையான விசாரணை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டது மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் போலீசார் ஞானசேகரன் என்பவனைக் கைது செய்தனர். இதில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்றும் வேறு யாருக்கும் இதில் தொடர்பு இருப்பது போலத் தெரியவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யார் அந்த சார்:
இருப்பினும், இந்த கொடூரம் நடந்த போது ஞானசேகரன் செல்போனில் யாரையோ அழைத்துப் பேசியதாகவும் அதன் பிறகு அந்த சாருடன் இருக்க வேண்டும் என மிரட்டியதாகவும் மாணவி குறிப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது.. இதனால் இந்த சம்பவத்தில் ஒருவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சொல்லி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
திருமாவளவன்:
இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரைத் தாண்டி வேறு சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்துள்ளன. பெண்களுக்கான பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதை விசிக அவ்வப்போது சுட்டிக்காட்டியே வருகிறோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். இருந்த போதிலும் பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு உரியப் பாதுகாப்பை வழங்க வேண்டும். இதற்குத் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சந்தேகம் இருக்கு:
இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரைத் தாண்டி வேறு சிலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் போலீசார் நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அனைவரையும் கைது செய்ய வேண்டும். மேலும், கைது செய்யப்பட்ட நபருக்கும் உடனடியாக ஜாமீன் வழங்கக் கூடாது. அவரை சிறையில் வைத்தபடியே விசாரணையை முடித்து தண்டனை வாங்கி தர வேண்டும்" என்றார்.
யார் அந்த 'சார்' என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவது குறித்த கேள்விக்கு, "இதுபோல ஒரு சந்தேகம் இருப்பதால்தான் நேர்மையான புலன் விசாரணை தேவை. குற்றம் செய்த யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்று அவர் குறிப்பிட்டார். திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவரே இதில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
போலீஸ் விளக்கமும் எதிர்க்கட்சிகள் மறுப்பும்:
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ. அருண் விளக்கமளித்திருந்தார். அதில் ஞானசேகரன் இந்தச் சம்பவம் நடந்த போது செல்போனை ஏரோபிளேன் மோடில் தான் போட்டிருந்தார் என்றும் மாணவியை மிரட்டவே அப்படிச் செய்ததாகவும் கூறினார். இருப்பினும், அதை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சிகள் இதில் உரிய விசாரணை தேவை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
-
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
கடலூர் மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications