புகழ் பெற்ற அண்ணா பல்கலையில் அதிர்ச்சி.. காசுக்காக செய்த காரியத்தால் பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
சென்னை: 2017-2018ம் ஆண்டு பருவத் தேர்வுகளில் விடைத்தாளில் மதிப்பெண்களை மாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டில் சிக்கி 4 பேராசிரியர்களை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் பருவத் தேர்வு நடந்தது. இதேபோல் 2018ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அரியர் தேர்வும் நடந்தது. இந்த தேர்வுகளில் விடைத்தாள்களில் மதிப்பெண்களை மாற்றிப்போட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக பேராசிரியர்கள் குழு ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், 20 அரியர்கள் வைத்திருந்த மாணவர்கள் சிலர் ஒரே முயற்சியில் அனைத்து பாடங்களிலும் சிறப்பான மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடத்திருப்பதை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பேராசிரியர்கள் குழு அறிக்கை அளித்தது.
இது தொடர்பாக பேராசிரியர்களின் உயர்நிலை விசாரணைக் குழு அளித்த அறிக்கையில், 100க்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரு விடைத்தாளுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி, விடைத்தாள்களை மாற்றி, மோசடியில் ஈடுபட்டிருந்தை குறிப்பிட்டு இருந்தனர்.
இதையடுத்து அதற்கு உடந்தையாக இருந்ததாக 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட 137 மாணவர்களின் பட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், இந்த மோசடியில் தொடர்புடையதாக முன்னாள் துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஸ்ரீநிவாசலு, பேராசிரியர்கள் செல்வமணி, குலோத்துங்கன் மற்றும் புகழேந்தி சுகுமாறன் ஆகிய 4 பேராசிரியர்களை பல்கலைக்கழக பதிவாளர் குமார் பணிஇடைநீக்கம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications