Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலையிடம் விசாரணை? அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஹைகோர்ட்டில் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம்பெண் ஒருவர் ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

anna-university-student-sexual-assault-case-petition-filed-in-high-court-for-annamalai-inquiry

சென்னையில் பிரியாணி கடை நடத்தி வரும் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இவர் அண்ணா பல்கலை வளாகத்திற்குள் அத்துமீறி சென்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கப்பட்டது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மே 28ம் தேதி ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது

அதன்பிறகு அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை உள்ளிட்ட 11 குற்றங்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால இடை இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக இந்த வழக்கு தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக, பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் திமுகவை கடுமையான விமர்சனம் செய்தன. மேலும் ஆளும் கட்சி பிரமுகருடன் குற்றவாளி ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறினர். மேலும் யார் அந்த சார்? என்பது டிரெண்ட் ஆக ஆரம்பித்தது.

இதற்கிடையே தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எம்எல் ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‛‛குற்றவாளி ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக அண்ணாமலை கூறி வருகிறார். ஆனால் அதுபற்றி விவரங்கள், தொலைபேசி உரையாடல்களை அண்ணாமலை சிறப்பு விசாரணை குழுவிடம் வழங்கவில்லை. இதனால் அண்ணாமலையிடம் விசாரிக்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+