அண்ணாமலையிடம் விசாரணை? அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஹைகோர்ட்டில் மனு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம்பெண் ஒருவர் ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னையில் பிரியாணி கடை நடத்தி வரும் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இவர் அண்ணா பல்கலை வளாகத்திற்குள் அத்துமீறி சென்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.
ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கப்பட்டது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மே 28ம் தேதி ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது
அதன்பிறகு அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை உள்ளிட்ட 11 குற்றங்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால இடை இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கு தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக, பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் திமுகவை கடுமையான விமர்சனம் செய்தன. மேலும் ஆளும் கட்சி பிரமுகருடன் குற்றவாளி ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறினர். மேலும் யார் அந்த சார்? என்பது டிரெண்ட் ஆக ஆரம்பித்தது.
இதற்கிடையே தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எம்எல் ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‛‛குற்றவாளி ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக அண்ணாமலை கூறி வருகிறார். ஆனால் அதுபற்றி விவரங்கள், தொலைபேசி உரையாடல்களை அண்ணாமலை சிறப்பு விசாரணை குழுவிடம் வழங்கவில்லை. இதனால் அண்ணாமலையிடம் விசாரிக்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications