Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் கனவு.. தண்ணி தெளிங்க! அண்ணாமலையை கட்டம் கட்டிய எஸ்வி சேகர்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சராகும் கனவில் இருப்பதாகவும், தண்ணீர் தெளித்துவிட்டால் கனவு தெளிந்துவிடும் என்றும் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒன்பது இடங்களை பாஜக டார்கெட் செய்திருக்கிறது. இதற்கேற்ப கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அண்ணாமலை குறித்து எஸ்.வி.சேகர் கூறிவரும் கருத்துக்கள் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியலுக்கு அண்ணாமலை செட் ஆக மாட்டார் என்றும், அவரால் தமிழ்நாட்டில் பாஜக வளராது எனவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

Annamalai chief minister is in a dream, says SV Sekar criticize

இந்நிலையில் அண்ணாமலை முதலமைச்சராகும் கனவில் இருப்பதாகவும், தண்ணீர் தெளித்துவிட்டால் கனவு தெளிந்துவிடும் என்றும் விமர்சித்துள்ளார். இன்று சென்னை மயிலாப்பூர் பைன் ஆர்ட் கிளப் அரங்கில் 'தமிழகத்தில் பிராமணர்கள் எதிர்காலம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய எஸ்.வி.சேகர்,

"நான் பிரதமர் மோடி அவர்களால் உந்தப்பட்டு பாரதிய ஜனதாவில் உறுப்பினராக இருக்கிறேன். ஆனால் அண்ணாமலை தலையில் இருக்கக்கூடிய தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் எந்த ஒரு செயல்பாடும் எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அண்ணாமலை, கட்சி தலைமையையும், மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். 2024 தேர்தல் முடிவு வெளிவரும் போது அண்ணாமலை இங்கிருந்து தூக்கி அடிப்படுவார். அப்போதுதான் நான் சொல்வது புரியும்.

பாஜகவில் ஒரு சதவீதம் கூட பிராமணர்கள் இருக்கக் கூடாது என்று முடிவுடன் செயல்பட்டுக் அவர் கொண்டிருக்கிறார். எனவே அவரை எப்படி எனக்கு பிடிக்கும்? எத்தனையோ தொகுதியில் இருந்து பிராமணர்களை நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். EWS 10% இட ஒதுக்கீடு எம்ஜிஆரின் கனவு அதை நிஜமாக்கியவர் பிரதமர் மோடி.

ஆனால், தமிழ்நாட்டில் அண்ணாமலை செய்து வரும் அரசியல் அனைத்தும் பூஜ்ஜியத்துக்கு வழிகாட்டக் கூடியது. இப்படி பேசுவதால் மோடி பிரதமராக வரமாட்டார் என்று நினைக்க வேண்டாம். 2024ல் முழு பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் மோடி அமர்வார். ஆனால் தமிழ்நாட்டின் அண்ணாமலையின் தலைமையில் இந்த வெற்றிக்கான பங்கு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். ஏனெனில் அண்ணாமலை தலைமையில் ஒரே ஒரு சீட்டு கூட பாஜக தமிழ்நாட்டில் ஜெயிக்காது.

திமுகவுக்கு அதிமுகவுக்கும் பெரும்பான்மையான வாக்கு வங்கிகள் இங்கு இருக்கிறது. பாரதிய ஜனதாவுக்கு வெறும் மூன்று சதவீதம் மட்டுமே வாக்குகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால் இந்த வாங்கு வங்கி 15 சதவீதமாக வளர்ச்சி அடைந்து விட்டது என்று அண்ணாமலை கூறுகிறார். அவருக்கு மட்டும் எப்படி ஏலியன் வழியாக வாக்குகள் வருமா? மூன்று சதவீத வாக்குகள் 13 சதவீதமாக உயர வேண்டும் எனில் திமுகவிலிருந்து 10% வாக்காளர்கள் பாஜகவுக்கு வர வேண்டும். இல்லையெனில் அதிமுகவில் இருந்து 10% வாக்காளர்கள் இங்கு வரவேண்டும்.

ஆனால் அப்படி வந்திருக்கிறார்களா? என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. இதற்காகத்தான் நாம் கூட்டணி அமைத்தோம். திமுக கூட்டணி விசயத்தில் மிகவும் உறுதியாக இருக்கும். அதிமுகவும் கூட்டணி விஷயத்தில் உறுதியாக இருந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதமே அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்கிற முடிவை அண்ணாமலை எடுத்துவிட்டார். ஏனெனில் கொங்கு மண்டலத்தில் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தனக்கு போட்டியாக இபிஎஸ் போன்றவர்கள் இருக்கக் கூடாது என்பதை அண்ணாமலை தீர்மானித்தார்" என்று விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+