232 தொகுதிகளை கடந்து விட்டோம்.. இன்னும் 2 தான் பாக்கி! இனி எல்லாம் மாறும்.. அண்ணாமலை நம்பிக்கை
சென்னை: இன்றைய தினம் மதுராந்தகம் தொகுதியில் நடந்த என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை நடத்தியதன் மூலம் தமிழகத்தின் 232 ஆவது சட்டசபை தொகுதியை கடந்தோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு விளக்கவும் தமிழக அரசின் மக்கள் விரோத செயல்களை எடுத்துரைக்கவும் என் மண் என் மக்கள் எனும் யாத்திரையை தொடங்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். அங்கிருந்து தினம் ஒரு தொகுதிகளில் பொதுக் கூட்டத்தை நடத்தினார். பிப்ரவரி 10 ஆம் தேதி உத்தரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் கூட்டத்தை நடத்தினார்.
இந்த நிலையில் மதுராந்தகத்தில் யாத்திரையை நடத்திய அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நமது என் மண் என் மக்கள் யாத்திரை இன்றுடன் 232 சட்டசபை தொகுதிகளை கடந்திருக்கிறோம்.
சற்று நேரத்திற்கு முன்பு 232 ஆவது தொகுதியாக மதுராந்தகத்தை கடந்துவிட்டு நாளை மறுநாள் திருப்பூரில் 233, 234 ஆவது தொகுதியை கடக்க இருக்கிறோம். இந்த கடுமையான பயணத்தில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சகோதர சகோதரிகள், பொதுமக்கள், மாற்றத்தை விரும்பக் கூடியவர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக ஒரு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து கூடவே வந்திருக்கிறீர்கள்.
மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். தமிழக அரசியலில் நாம் இத்தனை காலமாக எதிர்பார்த்த மாற்றம் நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நடக்கும் என்பது மிகத் தெளிவாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு பக்கம் பிரதமர் மோடியின் அற்புதமான ஆட்சி, மறுபக்கம் தமிழக பாஜகவின் கடுமையான உழைப்பு, இன்னொரு பக்கம் தமிழக மக்களின் நேர்மையான அரசியலுக்கான ஏக்கம்.
இந்த மூன்றுமே 2024 ஆம் ஆண்டு நமக்கு வெற்றி ஆண்டாக மாற இருக்கிறது. எனது அன்பான வேண்டுகோள் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பயணம் செய்தவர்கள், யாத்திரையை பார்த்தவர்கள், அன்புமழையை பொழிந்தவர்கள், யாத்திரைக்கு உதவியவர்கள், யாத்திரையை பார்க்க முடியாமல் தவறவிட்டவர்கள் ஆகியோர் வரும் 27ஆம் தேதி பல்லடத்தில் நடைபெறும் இந்த யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சிக்கு அவசியம் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இது அண்ணாமலையின் யாத்திரையோ பாரதிய ஜனதா கட்சியின் யாத்திரையோ இல்லாமல் இது உங்களுடைய யாத்திரை, மக்கள் இயக்கமாக எழுச்சி மிகுந்த ஒரு பயணமாக நாளை நமது என்ற நம்பிக்கை கொடுக்கக் கூடிய வெற்றிவிழாவாக பல்லடத்தில் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இதை எனது தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தமிழக சகோதர, சகோதரிகளையும் நான் அழைப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள். பல்லடத்திற்கு 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அவருக்கு உங்கள் ஆசிர்வாதத்தையும் அன்பையும் கொடுங்கள். உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுங்கள். நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 232 தொகுதிகளுக்கு என்னோடு வந்திருக்கிறீர்கள். மிகப் பெரிய எழுச்சியை என்னுடன் சேர்ந்து நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு எப்பொழுதும் நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன். நிச்சயம் இதை முடித்து காட்டுவோம். எடுத்திருக்கும் பணியை வெற்றிகரமாக நடத்தி காட்டி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொடுப்போம். நாளை நமது பாரத் மாதா கீ ஜே, ஜெய்ஹிந்த்! இவ்வாறு அண்ணாமலை பேசியுள்ளார்.
-
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications