"பிரேமலதா உடலில் கேப்டன் விஜயகாந்த் ஆவி புகுந்துவிட்டது.. அதனால்தான் இப்படி..” அண்ணாமலை பேச்சு!
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் உடலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ஆவி புகுந்துவிட்டதாகவும், அதனால்தான் திமுக ஆட்சியில் நடக்கும் வன்கொடுமைகளை அவர் பிரச்சாரக் கூட்டத்திலேயே தைரியமாகப் பேசினார் என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறித்து கிண்டலாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். பிரேமலதாவின் உடலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ஆவி புகுந்துவிட்டதாகவும், அதனால்தான் திமுக ஆட்சியில் நடக்கும் வன்கொடுமைகளை அவர் சேலம் கூட்டத்திலேயே தைரியமாகப் பேசினார் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "திமுக கூட்டணி தற்போது உடைந்துபோன தேங்காயைப் போலச் சிதறிக் கிடக்கிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்தத் திமுக கூட்டணிக்கு மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம். ராகுல் காந்தியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவில்லை. ராகுல் வடக்கே, ஸ்டாலின் தெற்கே பிரச்சாரம் செய்தனர்.
பிரேமலதா விஜயகாந்த்தைப் பாராட்ட வேண்டும். அவர் அவ்வப்போது உண்மையைப் பேசுகிறார். முதல்வர் முன்னிலையில் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையும், போதை கலாசாரமும் இருக்கின்றன எனப் பேசியதை வரவேற்கிறோம். திமுக ஆட்சிக்கு எதிராகப் பிரேமலதா பேசும் உண்மைகள் அனைத்தும் விஜயகாந்த்தின் ஆன்மா கொடுத்த தைரியம்." என அண்ணாமலை பேசியுள்ளார்.
தமிழகத்தில் எங்கும் பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம், இதை தவிர அண்ணன் ஸ்டாலின் மீது வேறு என்ன குற்றச்சாட்டு வைக்க முடியும்? இந்த ஆட்சியைப் பற்றி வேறு எந்த குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது என திமுக பிரச்சார மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தான் பிரேமலதா பேச்சை விமர்சித்து அண்ணாமலை பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications