Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு வரும் ஆப்பிள்? தமிழ்நாடு அசத்துதே! இனி நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் மூலம், ஆப்பிள் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், ஆப்பிள் நிறுவனம் நேரடியாகத் தனது கார்ப்பரேட் அலுவலகத்தை இதுவரை சென்னையில் திறக்கவில்லை. இந்நிலையில் தற்போது முதன்முறையாக தனது அலுவலகத்தை ஆப்பிள் நிறுவனம் சென்னையில் திறக்க இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், சென்னையில் தனது முதல் பிரத்யேக அலுவலகத்தைத் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை போரூரில் உள்ள DLF டவுன்டவுன் ஐடி பூங்காவில், சுமார் 20,000 சதுர அடி பரப்பளவில், ஆப்பிள் தனது அலுவலகத்தை அமைக்க இருக்கிறது.

Apple Chennai Porur

பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்குப் பிறகு, ஆப்பிளின் நேரடி அலுவலகம் சென்னைக்கு வர இருப்பது, சென்னையை ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மையமாக மேலும் உறுதிப்படுத்தும். DLF டவுன்டவுன் வளாகம் ஏற்கனவே பல பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டுள்ள ஒரு பிரீமியம் ஐடி பார்க் ஆகும்.

போரூரில் அமையவுள்ள மெட்ரோ ரயில் வசதி மற்றும் விமான நிலையத்திற்கு அருகில் இருப்பது போன்ற காரணங்களால் ஆப்பிள் இந்த இடத்தைத் தேர்வு செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் அமைக்க உள்ள தனது அலுவலகத்தின் மூலம், ஆப்பிள் தனது நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளைக் கவனிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+